rtjy 247 scaled
உலகம்செய்திகள்

காசா எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவம்

Share

காசா எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவம்

இஸ்ரேல் மற்றும் காசாவுக்கு இடையிலான போர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் இஸ்ரேலானது தற்போது தரைவழி தாக்குதலுக்கு தயாராகிக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசா எல்லையில் இஸ்ரேல் இராணுவத்தினர் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருவதோடு எல்லைக்கோடு பகுதியில் சிறப்புப் படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காசா மீது அதிகாரப்பூர்வமாக போர் அறிவித்து சுமார் 14 நாட்களாக இரு நாடுகளும் அடுத்தடுத்து பதிலடி தாக்குதல்கள் நடத்தி வருகின்றன.

இதில் குழந்தைகள், பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுவரை இஸ்ரேலில் தரப்பில் 1,400 பேரும் காசாவில் 3,478 பேரும் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

முன்னதாக ஏவுகணைகள், குண்டுகள் மூலம் பெரும்பாலும் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், தங்களின் அடுத்தகட்ட தாக்குதலாக தரைவழித்தாக்குதல் இருக்கும் என இஸ்ரேல் அறிவித்திருந்தது.

இந்நிலையில் காசா எல்லையில் சிறப்புப் படையினர் தற்போது ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றமை தரைவழித்தாகுதலுக்கு வழிவகுக்கும் என அஞ்சப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 202
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு அமைதி முன்னெடுப்பு: உலக நாடுகளின் பாராட்டைப் பெறும் பாகிஸ்தானின் மத்தியஸ்தப் பங்கு!

மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்கும் முயற்சிகளில் பாகிஸ்தான் ஒரு...

world 201
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அமைதிப் பேரணிக்காக இலங்கை வரும் ‘அலோகா’: விமானத்தில் பயணிகளுடன் பயணிக்கச் சிறப்பு அனுமதி!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள சர்வதேச “அமைதிப்...

world 200
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாகன இலக்கத் தகடுகளில் மாற்றமா? பொலிஸார் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

இலங்கையில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தரநிலைகளுக்குப் புறம்பாக, தரமற்ற மற்றும் வர்ணமயமான வாகனப் பதிவு...

world 197
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்கு ஒரு பேரல் எண்ணெய் $286: உலகளாவிய எரிசக்தி நெருக்கடியில் சிக்கிய தீவு தேசம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எண்ணெய் நெருக்கடி, காகித வர்த்தகத்தைத் தாண்டி...