rtjy 239 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 22 வயது

Share

தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி ஆரம்பிக்கப்பட்டு 22 வருடங்கள் கடந்துள்ளது.

தமிழ்தேசியக்கூட்டமைப்பு தமிழீழ விடுதலைப்புலிகளின் அங்கீகாரத்துடன் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் 2000ஆம் ஆண்டு எடுத்த தொடர் முயற்சினால் 2001.10.20 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக கூட்டு ஒப்பந்தம் தமிழ்தேசியகூட்டமைப்பாக கையொப்பம் இடப்பட்டது.

இந்த கையொப்பம் நான்கு கட்சி செயலாளர்கள் இடப்பட்ட திகதியான 2001, அக்டோபர்,20ஆம் திகதியை தமிழ்தேசிய கூட்டமைப்பு உருவான நாளாக உத்தியோகபூர்வமாக தேர்தல் திணைக்களத்துக்கு அறிவிக்கப்பட்டது.

இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி தமிழர் விடுதலைக்கூட்டணியாக செயல்பட்டதால், சார்பாக அந்த கட்சியின் செயலாளர் நாயகமாக இருந்த இரா. சம்மந்தன், தமிழீழவிடுதலை இயக்கம், சார்பாக அப்போது அந்த கட்சியின் செயலாளநாயகமாக இருந்த ந.ஶ்ரீகாந்தாவும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, சார்பாக அந்த கட்சியின் செயலாளர் நாயகம் சுரேஷ் பிரமச்சந்திரனும், அகில இலங்கைத்தமிழ் காங்கிரஷ் சார்பாக செயலாளர் ந.குமரகுருபரனும் கையொப்பம் இட்டனர்.

இதன்போது தமிழர் விடுதலைக்கூட்டணி எனும் அரசியல் கட்சியில் உதயசூரியன் சின்னத்தில் தேர்தலில் வேட்பு மனுக்கள் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது. தமிழ்தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு முதலாவது பொதுத்தேர்தல் (12.06.2001)இல் இடம்பெற்றது.

அந்த தேர்தலில் தமிழர் விடுதலைக்கூட்டணி செயலாளர் நாயகமாக அப்போது செயல்பட்ட இரா.சம்மந்தனால் வேட்பு மனுக்களில் கையொப்பம் இடப்பட்டன.

தமிழ்தேசியக்கூட்டமைப்பு வடக்கு கிழக்கில் 348,164, வாக்குகளை பெற்று 14, உறுப்பினர்களுடன் 01, தேசியபட்டியல் உறுப்பினருமாக 15, பேர் நாடாளுமன்றம் சென்றனர்.

2001ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் இடம்பெற்ற காலத்தில் வடக்கு கிழக்கில் 70 சத வீத நிலப்பரப்பு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்ததுடன் ஒரு நடைமுறை அரசையும் விடுதலைப்புலிகள் நிர்வாகம் செய்து வந்த காலமாகும்.

அதனால் தமிழ்தேசிய கூட்டமைப்பு 15 நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்மந்தன் தலைமையில் கூடிய நாடாளுமன்றக்குழு கூட்டத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளை ஏக பிரதிநிதியாக ஏற்க வேண்டும் என தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற முன்மொழியப்பட்டபோது 15 பேரில் 14 பேர் அதனை ஏற்றனர். ஒருவர் மட்டும் ஏற்கமுடியாது என கூறினார் அவர் கிளிநொச்சி மாவட்டம் ஊடாக தெரிவான வீ.ஆனந்தசங்கரி ஆவார்.

இதனால் நாடாளுமன்ற குழுவில் முரன்பாடு ஏற்பட்டு வீ.ஆனந்தசங்கரி தனித்து செயல்பட்டார்.

இந்நிலையில் 2004 பெப்ரவரியில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு அடுத்த தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

வீ. ஆனந்தசங்கரி தமிழர் விடுதலைக் கூட்டணியின் சிலரை அவர் பக்கம் எடுத்து விடுதலைப்புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தனர்.

இதனால், 2004 தேர்தலில் உதயசூரியன் சின்னத்தையும், தமிழர் விடுதலைக்கூட்டணி கட்சியையும் பயன்படுத்த முடியாது என வீ.ஆனந்தசங்கரி நீதிமன்றத்தில் இருந்து தடை உத்தரவு பெற்றார்.

இதனால், கிளிநொச்சியில் தமிழ்தேசிய கூட்டமைப்பில் உள்ள கட்சி தலைவர், செயலாளர்களை அழைத்த விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுமாறு கட்டளை இட்டார்.

2004.04.08இல் இடம்பெற்ற தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பு இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியிலும் அதன் வீட்டுச்சின்னத்திலும் போட்டியிட்டு மீளக் கொண்டு வந்தார்கள். 2004 633,654 வாக்குகளைப்பெற்று 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சரித்திரத்தில் முதல்தடவையாக வடக்கு கிழக்கில் இருந்து தெரிவாகினர்.

2004,தொடக்கம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கடந்த 2020,பொதுத்தேர்தல் வரையும் இலங்கைத்தமிழ் அ்ரசுக்கட்சியின் வீட்டுச்சின்னத்தில் அனைத்து தேர்தல்களையும் சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற தேர்தல் விபரம்:
2001 இல் 348164 வாக்குகள்: 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
2004 இல் 633654 வாக்குகள்: 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
2010 இல் 233,190 வாக்குகள்: 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
2015 இல் 515,963 வாக்குகள்: 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
2020 இல் 327,168 வாக்குகள்: 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

Share
தொடர்புடையது
25 693fd3d85a76b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊவா மாகாணத்தில் உள்ள 892 பாடசாலைகளும் இன்று நண்பகலுடன் மூடல் – சீரற்ற வானிலையால் அதிரடி முடிவு!

ஊவா மாகாணத்தில் தற்போது நிலவி வரும் கடும் மழை மற்றும் சீரற்ற வானிலை காரணமாக, மாகாணத்திலுள்ள...

1765326736 Sri Lanka showers Met 6
செய்திகள்இலங்கை

தீவிரமடையும் மழையினால் நீர்நிலைகள் நிரம்புகின்றன: வடகிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டில் மீண்டும் அதிதீவிர மழைவீழ்ச்சி பதிவாகுமாயின், நீர்நிலைகளின் நீர்மட்டம்...

image 870x 66fcf5f77e960
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு: இது வெறும் வாக்குறுதி அல்ல, செயல் வடிவம் பெறும்- அமைச்சர் விஜித ஹேரத் உறுதி!

இலங்கையில் தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியான நிரந்தரத் தீர்வு வழங்கப்படும் என்றும், கடந்த காலங்களைப் போலன்றி...

IMG 2110
செய்திகள்உலகம்

சீனாவில் தேவாலயங்கள் மீது கடும் நடவடிக்கை: கட்டிடம் இடிப்பு மற்றும் முக்கிய தலைவர்கள் கைது!

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத ‘நிலத்தடி தேவாலயங்கள்’ (Underground Churches) மீது அந்நாட்டு கம்யூனிஸ்ட் அரசு...