rtjy 220 scaled
உலகம்செய்திகள்

இந்தியாவின் செயலால் உருவாகியுள்ள புதிய பிரச்சினை

Share

இந்தியாவின் செயலால் உருவாகியுள்ள புதிய பிரச்சினை

கனேடிய தூதரக அதிகாரிகளை இந்தியா வெளியேற்றியுள்ளதால், இந்தியர்களுக்கான விசா பரிசீலனை தாமதமாகும் என கனடா புலம்பெயர்தல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜூன் மாதம் 18ஆம் திகதி, சீக்கிய பிரிவினைவாத அமைப்பொன்றின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் என்பவர் கனடாவில் கொல்லப்பட்ட நிலையில், அந்த சம்பவத்தின் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்தார்.

அதைத் தொடர்ந்து இரு நாடுகளும் எடுத்த நடவடிக்கைகளால், இரு நாடுகளுக்குமிடையிலான தூதரக உறவில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில், கனேடிய தூதரக அதிகாரிகள் 41பேரை இந்தியாவிலிருந்து வெளியேற்றுமாறு இந்தியா கனடாவை அறிவுறுத்தியது. அதன்படி, அவர்கள் இந்தியாவிலிருந்து வெளியேறிவிட்டதாக கனடா வெளி விவகாரங்கள் துறை அமைச்சரான Mélanie Joly தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய கனடா புலம்பெயர்தல் துறை அமைச்சரான Marc Miller, கனேடிய தூதரக அதிகாரிகள் இந்தியாவிலிருந்து வெளியேறியுள்ளதைத் தொடர்ந்து, கனடா வர விரும்பும் இந்தியர்களுக்கான விசா பரிசீலனை தாமதமாகும் என்று கூறியுள்ளார்.

கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பும், இந்தியாவில் அதன் அதிகாரிகளின் எண்ணிக்கையைக் குறைக்க இருப்பதாக புலம்பெயர்தல் துறை அமைச்சரான Marc Miller தெரிவித்துள்ளார்.

இதற்கு முன் இந்தியாவில் கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பின் அதிகாரிகள் 27 பேர் இருந்த நிலையில், அந்த எண்ணிக்கை வெறும் 5ஆக குறைக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியர்கள் கனடா விசா பெறுவதற்கான நடவடிக்கைகளை, இந்தியாவிலிருக்கும் கனேடிய அதிகாரிகளும் செய்யவேண்டியிருக்கும். அப்படிப்பட்ட நிலையில், இந்தியாவில் கனேடிய அதிகாரிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுவதால், இனி இந்தியர்களின் விசா பரிசீலனை தாமதமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

கனேடிய தூதரக அதிகாரிகளை இந்தியா வெளியேற்றியுள்ளதால் உருவாகியுள்ள புதிய பிரச்சினை | India Visa Processing Will Slow

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...