rtjygg 1 scaled
உலகம்செய்திகள்

இஸ்ரேல் ஆயுதங்களுக்கு மத்திய கிழக்கு நாடுகளில் அனுமதியில்லை

Share

இஸ்ரேல் ஆயுதங்களுக்கு மத்திய கிழக்கு நாடுகளில் அனுமதியில்லை

அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்க முடிவு செய்துள்ள நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் அவ் ஆயுதங்களை பயன்படுத்த ஈரான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கத்தார் பாதுகாப்பு அமைச்சரை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டுள்ள ஈரானிய பிரதான தளபதி முகமது பாகேரி குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இந்நிலையில் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்களில் இருந்து இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை மாற்றுவதைத் தடுக்குமாறு பிராந்திய நாடுகளை பாகேரி வலியுறுத்தியுள்ளார்.

ஹமாஸ் படைகளுடனும் ஈரானுடனும் நெருக்கமான தொடர்பை கொண்டுள்ள கத்தார் நாட்டில் தான் மத்திய கிழக்கில் உள்ள மிகப்பெரிய அமெரிக்க இராணுவ தளம் அமைந்துள்ளது.

முன்னதாக காசாவிற்கு எதிராக இஸ்ரேல் நடத்தும் கண்மூடித்தனமான தாக்குதல்கள் மற்ற தரப்பினரையும் மோதலில் ஈடுபடுத்த வழிவகுக்கும் என தளபதி முகமது பாகேரி எச்சரிக்கை விடுத்திருந்தார்.

மேலும், இஸ்ரேல் நிர்வாகத்தின் குற்றங்களின் தொடர்ச்சி, சில நாடுகளின் நேரடி ஆதரவு மற்றும் உதவி ஆகியவை நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது என குறிப்பிட்டுள்ள பாகேரி, ஹமாஸ் படைகளுக்கு ஆதரவாக மேலும் சிலர் களமிறங்க வாய்ப்பை ஏற்படுத்த வேண்டாம் என கூறியுள்ளார்.

இஸ்ரேலின் போர் குற்றங்களை தடுக்க உடனடியாக சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் எனவும் காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இஸ்ரேலின் இந்த கண்மூடித்தனமான போக்கு எதிர்ப்பு குழுக்களிடமிருந்து ஏதேனும் எதிர்வினை ஏற்பட வாய்ப்பாக அமையும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...