தினம் தினம் அதிகரிக்கும் எரிபொருள் விலை!

oil price 14

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை இன்றையதினம் மீண்டும் 9 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்தியக் கிழக்கில் மீண்டும் ஏற்பட்டுள்ள மோதல் நிலை அதனால் ஏற்பட்டுள்ள தொடர் பதற்றம் காரணமாகவே உலக சந்தையில் எரிபொருளின் விலை கடுமையான உயர்வை சந்தித்துள்ளது.
ஒரு பீப்பாய் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 7.29 டொலர்களால் அதிகரித்து 83.30 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

மேலும், ஒரு பீப்பாய் WTI கச்சா எண்ணெய் விலை 6.73 டொலர்களால் அதிகரித்து 78.30 அமெரிக்க டொலர்களாக உயர்வடைந்துள்ளது.

 

Exit mobile version