கடந்த சில மாதங்களாகப் பல ஏற்றத் தாழ்வுகளை சந்தித்தாலும், ஸிம்பாப்வே அணிக்கு எதிரான இருபதுக்கு 20 தொடரில் விளையாடத்தன்னம்பிக்கை குறையவில்லை என இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்துள்ளார்.
IPL தொடரின் மூலம் கவனம் ஈர்த்த 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி, இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி, இந்தியாவின் மிக இளைய சர்வதேச கிரிக்கெட் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
ஹராரே மைதானத்தில் மீண்டும் விளையாடுவது தனக்கு மிகவும் சிறப்பான உணர்வைத் தருவதாக அவர் கூறியுள்ளார்.
பயிற்றுவிப்பாளர் மற்றும் அணியினரின் ஆதரவுடன் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தயாராக இருப்பதாகவும், வைபவ் சூர்யவன்ஷி கூறியுள்ளார்.

