Accident 01
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இரு பாரவூர்திகள் நேருக்கு நேர் மோதி விபத்து: ஐவர் காயம்!

Share

மரக்கறிகளை ஏற்றிச் சென்ற லொறியும் கோழி உரத்தை ஏற்றிச் சென்ற லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் புத்தளம், முந்தலம் – மங்களஎளிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது என முந்தலம் பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.

நுரைச்சோலையிலிருந்து கொழும்பு நோக்கி மரக்கறிகளை ஏற்றிச் சென்ற லொறியும் நவடன்குளத்திலிருந்து நுரைச்சோலை நோக்கி சென்ற லொறியுமே இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

Accident 02

இந்த விபத்தில் இரு லொறிகளின் சாரதிகளும் மற்றும்  லொறியில் பயணித்தவர்களுமே படுகாயமடைந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் பிரதேச மக்களின் உதவியுடன் உடனடியாக சிலாபம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் இரு லொறிகளும் பாரியளவில் சேதமடைந்துள்ளன.

விபத்து தொடர்பில் முந்தலாம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 8
இலங்கைசெய்திகள்

உக்ரைன் மீது ரஸ்யா மிகப்பெரும் தாக்குதல்! உக்ரைன் F-16 போர் விமானி பலி

உக்ரைன் மீது 477 ட்ரோன்கள் மற்றும் 60 ஏவுகணைகளைக் கொண்டு ரஸ்யா இன்று மிகப்பெரிய வான்வழித்...

16 8
இலங்கைசெய்திகள்

146 பயணிகளுடன் புறப்படவிருந்த விமானத்தில் தவிர்க்கப்பட்ட மற்றுமொரு பாரிய விபத்து!

சென்னையில் இருந்து தாய்லாந்து நோக்கிப் புறப்படவிருந்த விமானத்தில் திடீரென தொழில்நுட்ப பிரச்சினை ஏற்பட்டதால் குறித்த விமானம்...

14 8
இலங்கைசெய்திகள்

யாழ்.கடற்பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் கடற்றொழிலாளர் உயிரிழப்பு

யாழ்.வடமராட்சிக் கிழக்கு நாகர்கோவில் கடற் பகுதியில் இடம் பெற்ற படகு விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி...

19 7
இலங்கைசெய்திகள்

இலங்கையிலிருந்து படகு வழியாக தப்பித்து மூவர் தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையில் இருந்து இன்று(28) அதிகாலை படகு மூலம் சிவில் பாதுகாப்புத் திணைக்கள உத்தியோகத்தர் உள்ளிட்ட மூவர்...