சென்னையில் நடிகர் அஜித்குமார், நடிகை ரம்யா கிருஷ்ணன் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: புரளி என உறுதி – மிரட்டல் விடுத்தவர் குறித்துக் காவல்துறையினர் விசாரணை!

ajith111125 1

இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், பாடசாலைகள், விமானங்கள் மற்றும் விமான நிலையங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது சென்னை டி.ஜி.பி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் (Mail) மூலம் மிரட்டல் வந்துள்ளது.

அந்த மின்னஞ்சலில் சென்னையில் உள்ள நடிகர் அஜித்குமார் வீடு, நடிகை ரம்யா கிருஷ்ணன் வீடு, நடிகர் எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர் வீடுகளிலும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மிரட்டலின் அடிப்படையில், வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சம்பந்தப்பட்ட இடங்களில் உடனடியாகச் சோதனை நடத்தினர்.

நீண்ட சோதனைக்குப் பிறகு, இந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி (Hoax) எனத் தெரியவந்தது. இந்த மிரட்டலை விடுத்த நபர் குறித்துச் சென்னை காவல்துறையினர் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version