கெசினோ வரி 18% ஆக உயர்வு; இலங்கையர்களுக்கான நுழைவுக் கட்டணம் இரட்டிப்பு – பிரதமர் அறிவிப்பு!

Untitled design 15 9

கெசினோ உரிமையாளர்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரியானது, 2025 அக்டோபர் 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், தற்போதுள்ள 10 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 21) பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை குடிமகனிடமிருந்து கெசினோக்களுக்கு வசூலிக்கப்படும் நுழைவு கட்டணம் தற்போதைய 50 அமெரிக்க டொலர்களில் இருந்து 100 அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கப்படும்.

வெளிநாட்டினருக்கான நுழைவுக் கட்டணம் வர்த்தமானியால் அதிகரிக்கப்படவில்லை.

இந்த கெசினோ வரி மற்றும் நுழைவுக் கட்டண உயர்வுகள் அனைத்தும் 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் முன்மொழிவுகளின் அடிப்படையில் அதிகரிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version