3 2
உலகம்ஏனையவைசெய்திகள்

உலகில் மிகவும் வயதானவர் 116 வயதில் காலமானார்

Share

உலகின் மிக வயதானவராக அறிவிக்கப்பட்டிருந்த பிரேசிலிய கன்னியாஸ்திரி சகோதரி இனா கனபரோ லூகாஸ்(Inah Canabarro Lucas), தனது 116 வயதில் காலமானார்.

தெற்கு பிரேசிலிய மாநிலமான ரியோ கிராண்டே டோ சுலில் 1908 ஜூன் 8 ஆம் திகதி அவர் பிறந்தார் இனா கனபரோ லூகாஸ், தனது 20 களின் முற்பகுதியில் கத்தோலிக்க கன்னியாஸ்திரியானார்.

அவர், தனது பிறந்தநாளை தனக்கு பிடித்த விளையாட்டுக்கழகமான இன்டர்நேசனல் – போர்டோ அலெக்ரேவின் கால்பந்து அணியுடைய அரங்கத்தின் வடிவத்தில் ஒரு கேக்குடன் எப்போதும் கொண்டாடி வந்ததாக, அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தீவிர கால்பந்து ரசிகையான அவர், தனது 116வது பிறந்தநாளை தனக்குப் பிடித்த அணியின் சின்னத்தை அணிந்து கொண்டாடியுள்ளார்.

2018 ஆம் ஆண்டு போப் பிரான்சிஸால் ஆசீர்வதிக்கப்பட்ட சகோதரி இனா, கடவுளே தனது நீண்ட ஆயுளுக்கு இரகசியம் என்று கூறி வந்துள்ளார்.

இந்தநிலையில், சகோதரி இனாவின் மறைவை அடுத்து, தற்போது வாழும் வயதானவர் என்ற பட்டம் இங்கிலாந்தின் சர்ரேயைச் சேர்ந்த 115 வயதான எத்தேல் கேட்டர்ஹாம் என்பவருக்கு செல்கிறது.

116 வயதான சகோதரி இனாவுக்கு எந்த நோயும் இல்லை, ஆனால் அவரது உடல் படிப்படியாக வேலை செய்வதை நிறுத்திவிட்டது என்று அவரது மருமகன் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
49b63185 90f2 4718 86a9 514694fd4c00
செய்திகள்இலங்கை

வாக்குறுதி அளித்தபடி நிறைவேற்று ஜனாதிபதி முறை நிச்சயமாக ஒழிக்கப்படும் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளித்தவாறு, நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை கட்டாயம் ஒழிக்கப்படும்...

harini 07 02 2025 1 1000x600 1
செய்திகள்உலகம்

மிஸ் பின்லாந்து பட்டம் பறிப்பு – ஆசிய நாடுகளிடம் மன்னிப்பு கோரினார் பின்லாந்து பிரதமர்!

ஆசியர்களைக் கேலி செய்யும் வகையில் இனவெறிப் போக்கைக் வெளிப்படுத்திய புகாரில், 2025-ஆம் ஆண்டுக்கான மிஸ் பின்லாந்து...

1598682810 0047
செய்திகள்உலகம்

ஆர்ட்டிக் திமிங்கிலங்களில் அபாயகரமான வைரஸ் பாதிப்பு: ஆளில்லா விமானங்கள் மூலம் புதிய கண்டுபிடிப்பு!

ஆர்ட்டிக் கடலில் வாழும் திமிங்கிலங்களின் ஆரோக்கியத்தைக் கண்டறிய ஆளில்லா விமானங்கள் (Drones) மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்,...

Progress review meeting of the Ministry of Transport 1
இலங்கைஅரசியல்செய்திகள்

நாடு மீண்டும் திவால் நிலைக்குத் தள்ளப்படாது – புள்ளிவிபரங்களுடன் ஜனாதிபதி அநுர குமார அதிரடி விளக்கம்!

பேரிடர் நிவாரணத்திற்காக ஒதுக்கப்பட்ட 500 பில்லியன் ரூபா நிதியினால் நாடு மீண்டும் திவால்நிலைக்குச் செல்லும் என்ற...