17 13
ஏனையவை

உலகின் மிகப்பெரிய பவளப்பாறை கண்டுபிடிப்பு!

Share

உலகின் மிகப்பெரிய பவளப்பாறை கண்டுபிடிப்பு!

தேசிய புவியியல் பிரிஸ்டைன் கடல் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் உலகின் மிகப்பெரிய பவளப்பாறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் (Australia) தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள சாலமன் தீவுக்கூட்டத்திற்கு இந்த பவளப்பாறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 500 ஆண்டுகள் பழமையான இந்த பவளைப்பாறையானது, 32 மீற்றர் நீளம், 34 மீற்றர் அகலம் மற்றும் 5.5 மீற்றர் உயரம் கொண்டது என கூறப்படுகிறது.

இந்த கண்டுபிடிப்பானது, பவளப்பாறைகளை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை எதிர்கால சந்ததியினருக்கு உணர்த்துவதாக விஞ்ஞானிகளை பாராட்டிய அந்நாட்டு பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், கடலில் பவளம்எனப்படும் ஒரு உயிரினத்தால் சுரக்கப்படும் கால்சியம் கார்பனேட்டினால் பவள பாறைகள் உருவாகின்றன.

கடல்களின் மழைக்காடுகள் என அழைக்கப்படும் இந்த பவளப்பாறைகள் சுமார் 25 சதவிகிதம் கடல் வாழ் உயிரினங்களின் வாழ்விடமாக திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 30
ஏனையவை

மின்சாரக் கட்டண உயர்வு: ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் நடைமுறை!

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக்...

image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...