3 37
ஏனையவை

கணவனால் இளம் தாய்க்கு ஏற்பட்ட விபரீதம்

Share

கணவனால் இளம் தாய்க்கு ஏற்பட்ட விபரீதம்

மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்ததை அடுத்து கணவன் இரண்டு பிள்ளைகளின் தாயின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளதாக புத்தளம்(puttalam) காவல்துறையினர் தெரிவித்தனர்.

பலத்த தீக்காயங்களுக்கு உள்ளான இரண்டு பிள்ளைகளின் தாய் சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் நேற்று (19) உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

புத்தளம் தில்லையடி பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான ஜமால்தீன் பாத்திமா சபுனா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மனைவியை அணைக்கச் சென்ற போது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்த கணவனுக்கும் சிறு தீக்காயங்கள் ஏற்பட்டு புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கணவன் தீ வைத்ததையடுத்து, இரண்டு பிள்ளைகளின் தாயான அவரை,அயலவர்கள் மீட்டு, உடனடியாக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
Tumbnail eduwire 113
ஏனையவை

க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு: புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் – பரீட்சை ஆணையாளர் நாயகம்!

நாட்டில் நிலவும் கடும் மழை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாக, கல்விப் பொதுத் தராதர உயர்தரப்...

Easter Sunday attacks
ஏனையவை

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் இலங்கை பொலிஸாரால் விசாரணைக்குள்ளான சந்தேகநபர் பிரித்தானியாவில் தஞ்சம் கோருகிறார்!

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் (Easter...

articles2FRbYMLy7admFnw5slJVju
ஏனையவை

பாபா வங்காவின் 2026 கணிப்பு: உலகப்போர் 3 அபாயம் – அமெரிக்கா, சீனா மோதல் உச்சம்!

புகழ்பெற்ற ஜோதிடக் கணிப்பாளரான பாபா வங்காவின் (Baba Vanga) கணிப்புகள் குறித்துச் சில சந்தேகங்கள் நிலவினாலும்,...

articles2FyiS73wPBBTEPNSERwl9g
ஏனையவை

முன் பிள்ளைப் பருவ கல்வி: 2027 முதல் புதிய பாடத்திட்டம் அமல் – பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

முன் பிள்ளைப் பருவத்தினருக்குத் தரப்படுத்தப்பட்ட ஆரம்பகால கல்வியை வழங்கும் நோக்கில், 2027 ஆம் ஆண்டு முதல்...