1
ஏனையவை

தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் : இன்று வெளியாகவுள்ள அறிவிப்பு

Share

தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் : இன்று வெளியாகவுள்ள அறிவிப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) தேசியப் பட்டியல் ஆசனத்தை யாருக்கு வழங்குவது என்பது குறித்து தீர்மானிப்பதற்காக அக்கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த அரசியல்குழுக் கூட்டம் இன்று (17) காலை பத்து மணிக்கு வவுனியாவில் (Vavuniya) உள்ள அக்கட்சியின் மாவட்டக்கிளை காரியாலயத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த பத்தாவது நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கு வடக்கு, கிழக்கில் ஏழு ஆசனங்கள் கிடைத்துள்ள நிலையில் தேசியப் பட்டியலில் ஆசனமொன்று ஒதுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆசனத்தினை இம்முறை யாழ்.தேர்தல் மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யுமாறு கட்சியின் உறுப்பினர்கள் பலரும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றதாக குறிப்பிடப்படுகின்றது.

யாழ்.தேர்தல் மாவட்டத்தில் ஒரு ஆசனத்தையே தமிழரசுக்கட்சியால் பெற்றுக்கொள்ள முடிந்தமையாலும், தேசிய மக்கள் சக்தி அங்கு மூன்று ஆசனங்களை பெற்றுக்கொண்டுள்ளமையாலும் தேசியப் பட்டியல் ஆசனம் யாழ்ப்பாணத்துக்கே வழங்கப்பட வேண்டும் என்பது அந்த உறுப்பிர்களின் கருத்தாகவுள்ளது.

இதேவேளை, தேசியப் பட்டியல் ஆசனத்தினை சுமந்திரனுக்கு (M. A. Sumanthiran) வழங்க வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் அதிகரித்துள்ள போதும் சுமந்திரன் தேசியப் பட்டியல் உறுப்புரிமையை பெற்றுக்கொள்ளப்போவதில்லை என்று பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

மேலும், கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவுக்கு (Mavai Senathirajah) வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளதுடன் பெண் ஒருவருக்கு தேசியப்பட்டியல் ஆசனத்தினை ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 7
ஏனையவை

கொழும்பில் பிரபல சுப்பர் மார்க்கெட்டுகளின் மோசமான செயல் – அபராதம் விதிப்பு

கொழும்பில் காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனை செய்த சுப்பர் மார்க்கெட்டுகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தெமட்டகொட மற்றும் மட்டக்குளிய...

25 6848f21beec56
ஏனையவை

புதிய அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் பல கைதிகள் முறைகேடான வழியில் விடுவிப்பு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரான காலப்பகுதியில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான கைதிகள்...

25 683cefcc4dfbd
ஏனையவை

அச்சுவேலியில் பெண் தலைமைத்துவ குடும்பத்தின் கோழிகளுக்கு விஷம் வைத்த விசமிகள்!

யாழ். அச்சுவேலி பகுதியில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்று வாழ்வாதாரத்துக்காக வளர்த்து வந்த கோழிகளுக்கு விஷம்...

images 1 2
ஏனையவை

சரிகமப 5வது சீசனில் கலக்கிய முன்னணி நடிகையின் மகள்..! ஆடிஷனில் செம பாராட்டு..

ரியாலிட்டி ஷோக்களுக்கு இன்று மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக சரிகமப, சூப்பர்...