10 22
ஏனையவை

எல்லையற்ற அதிகாரம் வரம்பற்ற ஊழல்: அநுர அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Share

எல்லையற்ற அதிகாரம் வரம்பற்ற ஊழல்: அநுர அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இதற்கு முன்னர் எந்த அரசாங்கத்திற்கும் கிடைக்காத அதிகாரம் திசைக்காட்டிக்கு கிடைத்திருந்தாலும், எல்லையற்ற அதிகாரம் வரம்பற்ற ஊழலுக்கு வழிவகுக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய (Mahinda Deshapriya) தெரிவித்துள்ளார்.

ஆனால் தற்போதைய அரசாங்கம் அந்த நிலைமைக்கு வராது என்பதே மக்களின் நம்பிக்கை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மக்கள் கொடுத்த அதிகாரத்தை கவனமாக பயன்படுத்துவோம் என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் கூறியுள்ளமை பாராட்டத்தக்கது எனவும் மகிந்த தேசப்பிரிய கூறியுள்ளார்.

அத்தோடு, தற்போதைய நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையானவர்களுக்கு அனுபவம் இல்லையென்றாலும், திருமணத்திற்கு முன் சென்று அனுபவத்தைப் பெறுகிறார்களா என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

புதிய நாடாளுமன்ற பழையவற்றின் நல்ல விடயங்களை உள்வாங்கி, தங்கள் கட்சியின் அனுபவமிக்க உறுப்பினர்களால் வழிகாட்டலில், மக்கள் சேவையில் தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 30
ஏனையவை

மின்சாரக் கட்டண உயர்வு: ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் நடைமுறை!

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக்...

image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...