7 39
ஏனையவை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட இறுதி அறிவிப்பு

Share

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட இறுதி அறிவிப்பு

மாதிவெல நாடாளுமன்ற குடியிருப்பிலிருந்து இன்றையதினமும் (21) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறாவிட்டால் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

35 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீர எழுத்து மூலம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், சுமார் 80 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிவெல நாடாளுமன்ற குடியிருப்பிலிருந்து நேற்றைய தினம் (20) வெளியேறியுள்ளனர்.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர்கள் மாதிவெல உத்தியோகபூர்வ குடியிருப்புகளில் தொடர்ந்தும் தங்குவதற்கு பொதுத்தேர்தல் நடைபெற்ற கடந்த 14 ஆம் திகதி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

இதன்படி, கடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே இந்த வீட்டுத் தொகுதியில் தங்கும் தகுதி உள்ளதாக நாடாளுமன்ற அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மாதிவெல உத்தியோகபூர்வ குடியிருப்பு வளாகத்தில் உள்ள வீடுகளை புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க இந்த நாட்களில் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், மாதிவெல உத்தியோகபூர்வ குடியிருபு்பு தொகுதியில் சுமார் 110 வீடுகள் உள்ளன.

அதன் அடிப்படையில், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைவாக முதலில் கோரிக்கை சமர்ப்பிக்கப்படும் வரிசையிலேயே வீடுகள் வழங்கப்படும் என நாடாளுமன்ற சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
14 11 2025 819486 850x460
ஏனையவை

சந்தேகங்களை விடுத்து தேசத்தைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுங்கள் – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைப்பு!

ஒருவரையொருவர் சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனும் பார்ப்பதை விடுத்து, நாட்டின் எதிர்காலத்திற்காக அனைவரும் தத்தமது பொறுப்புகளை முறையாக நிறைவேற்ற...

MediaFile 7 1
ஏனையவை

மன்னார் கடற்றொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்: கூட்டுறவுச் சங்கம் கோரிக்கை!

நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களும் பாரிய பாதிப்புக்களைச் சந்தித்துள்ள...

images 8 2
ஏனையவை

கொழும்பு பெரஹர மாவத்த காணி 99 வருட குத்தகைக்கு விடுவிப்பு: முதலீட்டாளர்களைத் தெரிவு செய்ய அமைச்சரவை அனுமதி!

நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் (UDA) சொந்தமான கொழும்பு 03, கொள்ளுப்பிட்டி, பெரஹர மாவத்தையில் அமைந்துள்ள காணியைக்...

articles2FyEG6lrLYMw8L60exw5pH
ஏனையவை

காணி உரிமை வழங்கினால் மலையக வீட்டுப் பிரச்சினை தீரும் – ஜனாதிபதியிடம் ஜீவன் தொண்டமான் கோரிக்கை!

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நுவரெலியா மாவட்டச் செயலகத்தில்...