7 39
ஏனையவை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட இறுதி அறிவிப்பு

Share

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட இறுதி அறிவிப்பு

மாதிவெல நாடாளுமன்ற குடியிருப்பிலிருந்து இன்றையதினமும் (21) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறாவிட்டால் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

35 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீர எழுத்து மூலம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், சுமார் 80 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிவெல நாடாளுமன்ற குடியிருப்பிலிருந்து நேற்றைய தினம் (20) வெளியேறியுள்ளனர்.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர்கள் மாதிவெல உத்தியோகபூர்வ குடியிருப்புகளில் தொடர்ந்தும் தங்குவதற்கு பொதுத்தேர்தல் நடைபெற்ற கடந்த 14 ஆம் திகதி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

இதன்படி, கடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே இந்த வீட்டுத் தொகுதியில் தங்கும் தகுதி உள்ளதாக நாடாளுமன்ற அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மாதிவெல உத்தியோகபூர்வ குடியிருப்பு வளாகத்தில் உள்ள வீடுகளை புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க இந்த நாட்களில் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், மாதிவெல உத்தியோகபூர்வ குடியிருபு்பு தொகுதியில் சுமார் 110 வீடுகள் உள்ளன.

அதன் அடிப்படையில், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைவாக முதலில் கோரிக்கை சமர்ப்பிக்கப்படும் வரிசையிலேயே வீடுகள் வழங்கப்படும் என நாடாளுமன்ற சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 7
ஏனையவை

கொழும்பில் பிரபல சுப்பர் மார்க்கெட்டுகளின் மோசமான செயல் – அபராதம் விதிப்பு

கொழும்பில் காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனை செய்த சுப்பர் மார்க்கெட்டுகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தெமட்டகொட மற்றும் மட்டக்குளிய...

25 6848f21beec56
ஏனையவை

புதிய அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் பல கைதிகள் முறைகேடான வழியில் விடுவிப்பு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரான காலப்பகுதியில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான கைதிகள்...

25 683cefcc4dfbd
ஏனையவை

அச்சுவேலியில் பெண் தலைமைத்துவ குடும்பத்தின் கோழிகளுக்கு விஷம் வைத்த விசமிகள்!

யாழ். அச்சுவேலி பகுதியில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்று வாழ்வாதாரத்துக்காக வளர்த்து வந்த கோழிகளுக்கு விஷம்...

images 1 2
ஏனையவை

சரிகமப 5வது சீசனில் கலக்கிய முன்னணி நடிகையின் மகள்..! ஆடிஷனில் செம பாராட்டு..

ரியாலிட்டி ஷோக்களுக்கு இன்று மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக சரிகமப, சூப்பர்...