பிரியாணி பிரைட் ரைஸ் உண்பவர்களுக்கு எச்சரிக்கை

rtjy 167

பிரியாணி பிரைட் ரைஸ் உண்பவர்களுக்கு எச்சரிக்கை

பிரியாணி, ஃபிரைட் ரைஸ், இறைச்சி போன்ற உணவுகளுக்கு பல்வேறு நிறமூட்டிகளை கொண்டு பிரகாசமாகவும் கவர்ச்சியாகவும் தயாரிக்கப்படும் உணவுகள் உடலுக்கு தீங்கு விளைவிப்பதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இந்த நிறமிகள் சரியான அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளதா அல்லது அதிக அளவு பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய சுகாதார அமைச்சு ஆய்வுக்கூட பரிசோதனை நடத்த வேண்டும் என சங்கத்தின் பொருளாளர் ரோஷன குமார தெரிவித்துள்ளார்.

உணவுச் சட்டம் சந்தையில் பயன்படுத்தப்படும் நிறமூட்டிகளின் அளவைக் கட்டுப்படுத்தும் உட்பிரிவுகளையும் உள்ளடக்கியுள்ளது.

இருப்பினும், ரோஸ்ட் கோழி இறைச்சி, பிரியாணி மற்றும் ஃபிரைட் ரைஸ் வகைகள் தயாரிப்பதில் இந்த நிறமூட்டிகளை பயன்படுத்துவது உணவுக் கடைகளில் காணப்படுகிறது.

இது தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், சுகாதார அமைச்சின் உணவுப் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் திலக் சிறிவர்தனவிடம் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவினரிடம் தேவையான விதிமுறைகள் மற்றும் ஒழுங்குகள் குறித்து கேட்டபோது, தேவையான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version