24 66e50f41a1610 1
ஏனையவை

இயக்குனர் வெங்கட் பிரபுவின் பார்ட்டி படத்தின் தாமதம்.. தயாரிப்பாளர் கொடுத்த விளக்கம்

Share

இயக்குனர் வெங்கட் பிரபுவின் பார்ட்டி படத்தின் தாமதம்.. தயாரிப்பாளர் கொடுத்த விளக்கம்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெங்கட் பிரபு. இவர் இயக்கும் திரைப்படங்கள் பெரும்பாலும் பொழுதுபோக்கு திரைப்படமாகவே இருக்கும். அத்துடன் வெற்றித்திரைப்படமாகவும் அமையும்.

அந்த வகையில், சமீபத்தில் விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு, GOAT படத்தை இயக்கி வெளியிட்டார். இந்த படம் வசூலில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

2018 – ம் ஆண்டு டி.சிவா தயாரிப்பில் பார்ட்டி என்ற படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். இந்த படத்தில் சத்யராஜ், ஜெய், ஷாம், ஜெயராம், நாசர், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்துராஜ், ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

ஆனால், சில காரணங்களால் இந்த படம் வெளியிடாமல் இருந்தது. தற்போது, இதுகுறித்து இந்த படத்தின் தயாரிப்பாளர் விளக்கம் கொடுத்துள்ளார்.

அதில், ஃபிஜி-யில் இருந்து வரவேண்டிய சான்றிதழ் தாமதத்தினால் இந்தப் படம் வெளியீடு தடைப்பட்டது. அங்கு தற்போது வேறொரு அரசாங்கம் பதவியேற்றதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தொகையை விரைவில் திருப்பித் தருவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் சான்றிதழைப் பெற்று படத்தை டிசம்பரில் வெளியிடுவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் டி.சிவா தெரிவித்துள்ளார்.

பார்ட்டி படத்துக்காக நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் அவர்கள் சொந்த குரலில் ஒரு பாடலை பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share
தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...