3 39
ஏனையவை

எம்.பிக்களுக்கான வாகன இறக்குமதிக்கு அனுமதி இல்லை! உறுதியாக அறிவித்த அரசாங்கம்

Share

எம்.பிக்களுக்கான வாகன இறக்குமதிக்கு அனுமதி இல்லை! உறுதியாக அறிவித்த அரசாங்கம்

எதிர்காலத்தில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்(Vijitha Herath) தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம்(20) தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இனிவரும் காலங்களில் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்படாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் அமைச்சருக்கும் அலுவலக நோக்கங்களுக்காக வாகனம் இருக்க வேண்டும் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் வழங்கப்படாது என்று நாங்கள் ஒருபோதும் கூறவில்லை.

நாங்கள் கொள்கையை மிகத் தெளிவாக்கியுள்ளோம்.

ஒரு வாகனத்தை ஐந்து வருட காலத்திற்கு நாங்கள் வழங்குவோம். வாகனத்தை ஐந்து ஆண்டுகள் பயன்படுத்திய பிறகு, வாகனம் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

அவ்வாறு இல்லையெனில் தேய்மானத்தின் அடிப்படையில் ஐந்து ஆண்டுகளின் முடிவில் அரசாங்கத்திற்கு வாகனத்தின் மதிப்பை செலுத்தி வாகனத்தை சொந்தமாக்கிக் கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
w 1280h 720format jpgimgid 01ke937mtdxb7xrchhekg0a7eyimgname sonia gandhi admitted ganga ram hospital delhi pollution health update 2 1767684428621
ஏனையவை

இந்திய காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி: டெல்லியில் தீவிர சிகிச்சை!

இந்தியத் தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான சோனியா காந்தி, திடீர்...

MediaFile 1 3
ஏனையவை

சுற்றுலாப் பயணிகளுக்கான இலத்திரனியல் பயண அனுமதி திட்டம்: மார்ச் மாதத்திற்குள் நடைமுறைக்கு வரும்!

இலங்கைக்கு வருகை தரும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கான இலத்திரனியல் பயண அனுமதி (Electronic Travel Authorization...

1739116331 energy min
இலங்கைஏனையவைசெய்திகள்

மூன்று ஆண்டுகளில் 30% கட்டணக் குறைப்பு: நாடாளுமன்றத்தில் அமைச்சர் குமார ஜயகொடி உறுதி!

வாக்குறுதியளித்தபடி மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கும் இலக்கை நோக்கி அரசாங்கம்...

images 5 3
இலங்கைஏனையவைசெய்திகள்

மனிதக் கடத்தலை ஒழிக்க இலங்கையின் புதிய வியூகம்: 2026 – 2030 தேசிய மூலோபாயத் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

திட்டமிட்ட குற்றச்செயல்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் சமவாயம் (UNTOC) மற்றும் பலமோர் பணிச்சட்டகத்தின் (Palermo...