4 44
ஏனையவை

எம்.பிக்களுக்கான வாகன இறக்குமதிக்கு அனுமதி இல்லை! உறுதியாக அறிவித்த அரசாங்கம்

Share

எம்.பிக்களுக்கான வாகன இறக்குமதிக்கு அனுமதி இல்லை! உறுதியாக அறிவித்த அரசாங்கம்

எதிர்காலத்தில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்(Vijitha Herath) தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம்(20) தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இனிவரும் காலங்களில் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்படாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் அமைச்சருக்கும் அலுவலக நோக்கங்களுக்காக வாகனம் இருக்க வேண்டும் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் வழங்கப்படாது என்று நாங்கள் ஒருபோதும் கூறவில்லை.

நாங்கள் கொள்கையை மிகத் தெளிவாக்கியுள்ளோம்.

ஒரு வாகனத்தை ஐந்து வருட காலத்திற்கு நாங்கள் வழங்குவோம். வாகனத்தை ஐந்து ஆண்டுகள் பயன்படுத்திய பிறகு, வாகனம் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

அவ்வாறு இல்லையெனில் தேய்மானத்தின் அடிப்படையில் ஐந்து ஆண்டுகளின் முடிவில் அரசாங்கத்திற்கு வாகனத்தின் மதிப்பை செலுத்தி வாகனத்தை சொந்தமாக்கிக் கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
25 690723f808229
ஏனையவை

நைஜீரியாவில் ஐ.எஸ். குழுவினர் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல் – ஜனாதிபதி ட்ரம்ப் அறிவிப்பு!

நைஜீரியாவின் வடமேற்குப் பகுதியில் இயங்கி வரும் ஐ.எஸ். (ISIS) பயங்கரவாதக் குழுவினருக்கு எதிராக அமெரிக்க இராணுவம்...

14 11 2025 819486 850x460
ஏனையவை

சந்தேகங்களை விடுத்து தேசத்தைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுங்கள் – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைப்பு!

ஒருவரையொருவர் சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனும் பார்ப்பதை விடுத்து, நாட்டின் எதிர்காலத்திற்காக அனைவரும் தத்தமது பொறுப்புகளை முறையாக நிறைவேற்ற...

MediaFile 7 1
ஏனையவை

மன்னார் கடற்றொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்: கூட்டுறவுச் சங்கம் கோரிக்கை!

நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களும் பாரிய பாதிப்புக்களைச் சந்தித்துள்ள...

images 8 2
ஏனையவை

கொழும்பு பெரஹர மாவத்த காணி 99 வருட குத்தகைக்கு விடுவிப்பு: முதலீட்டாளர்களைத் தெரிவு செய்ய அமைச்சரவை அனுமதி!

நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் (UDA) சொந்தமான கொழும்பு 03, கொள்ளுப்பிட்டி, பெரஹர மாவத்தையில் அமைந்துள்ள காணியைக்...