ஏனையவை

தமக்கு போதிய பாதுகாப்பு இல்லை! தமிழர் பகுதியில் வீதிக்கு இறங்கிய ஆசிரியர்கள்

3 34
Share

தமக்கு போதிய பாதுகாப்பு இல்லை! தமிழர் பகுதியில் வீதிக்கு இறங்கிய ஆசிரியர்கள்

வவுனியா(Vavuniya) – வீரபுரம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமக்கு போதிய பாதுகாப்பு இல்லை என தெரிவித்தே பாடசாலையின் அனைத்து ஆசிரியர்களும் இன்றையதினம்(19.11.2024) சுகவீன விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கடந்த வாரம் பாடசாலையில் உயர்தர மாணவர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இளைஞர் ஒருவர் ஆண் ஆசிரியர் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி, மாணவி ஒருவரிடம் உரையாட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதற்கு குறித்த ஆசிரியர் மறுப்பு தெரிவித்த நிலையில், அதனால் ஏற்பட்ட முரண்பாட்டினால் சம்பவ தினத்தன்று மாலை ஆசிரியர் தங்கியிருந்த வீட்டிற்கு சென்ற இளைஞர்கள் ஆசிரியர் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பாக நேற்று(18) மாலை ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் செட்டிகுளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share
Related Articles
17 7
ஏனையவை

ஆபரேஷன் சிந்தூர்: கணவனை இழந்த பெண்ணின் உருக்கமான வார்த்தைகள்

பஹல்காம் தாக்குதலில் கணவனை இழந்த பெண்ணொருவர், ஆபரேஷன் சிந்தூருக்காக இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்....

2 17
ஏனையவை

முல்லைத்தீவில் அனைத்து பிரதேச சபைகளையும் தன்வசமாக்கிய தமிழரசுக் கட்சி!

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய மாந்தை கிழக்கு...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

30
இலங்கைஏனையவைசெய்திகள்

தேர்தல் கடமைகளுக்கு 65 ஆயிரம் பொலிஸார் நியமனம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கடமைகளுக்காக சுமார் 65,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக...