3 34
ஏனையவை

தமக்கு போதிய பாதுகாப்பு இல்லை! தமிழர் பகுதியில் வீதிக்கு இறங்கிய ஆசிரியர்கள்

Share

தமக்கு போதிய பாதுகாப்பு இல்லை! தமிழர் பகுதியில் வீதிக்கு இறங்கிய ஆசிரியர்கள்

வவுனியா(Vavuniya) – வீரபுரம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமக்கு போதிய பாதுகாப்பு இல்லை என தெரிவித்தே பாடசாலையின் அனைத்து ஆசிரியர்களும் இன்றையதினம்(19.11.2024) சுகவீன விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கடந்த வாரம் பாடசாலையில் உயர்தர மாணவர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இளைஞர் ஒருவர் ஆண் ஆசிரியர் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி, மாணவி ஒருவரிடம் உரையாட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதற்கு குறித்த ஆசிரியர் மறுப்பு தெரிவித்த நிலையில், அதனால் ஏற்பட்ட முரண்பாட்டினால் சம்பவ தினத்தன்று மாலை ஆசிரியர் தங்கியிருந்த வீட்டிற்கு சென்ற இளைஞர்கள் ஆசிரியர் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பாக நேற்று(18) மாலை ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் செட்டிகுளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
1717386794 images
ஏனையவை

நாட்டின் 11 மாவட்டங்களில் டெங்கு பரவல் மீண்டும் அதிகரிப்பு22 பேர் உயிரிழப்பு!

நாட்டின் 11 மாவட்டங்களில் டெங்கு நோய் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு...

ஏனையவை

“ஹீரோக்களுக்காக மட்டுமே சினிமா”: நடிகை ராதிகா ஆப்தேவின் அதிர்ச்சிக் கருத்து!

Rajinikanth Radhika Apte Actress இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவரான ராதிகா ஆப்தே, தான்...

download
ஏனையவை

தோட்டத் தொழிலாளர்கள் தீபாவளி ஏமாற்றம்: நாளாந்த வேதனம் குறித்து வடிவேல் சுரேஷ் கருத்து

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வடிவேல் சுரேஷ், இந்த முறை தீபாவளிக்கு...

ஏனையவை

வெளிநாட்டு வேலைக்குச் செல்வோர் கவனத்திற்கு: சலுகை விலையில் விமான டிக்கெட் வழங்கும் சாளரம் திறப்பு

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகப் பயணிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்குச் சலுகை விலையில் விமான டிக்கெட்டுகளை வழங்குவதற்காக, நாரஹேன்பிட்டையில் உள்ள...