23 3
ஏனையவை

66 கடவுச்சீட்டுகளுடன் பெண் உட்பட இருவர் கைது

Share

66 கடவுச்சீட்டுகளுடன் பெண் உட்பட இருவர் கைது

கொழும்பு (Colombo) – கஹதுடுவ (Kahathuduwa), சியம்பலாகொட பிரதேசத்தில் 66 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கஹதுடுவ காவல் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் நேற்று (16) மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட பெண் 42 வயதுடையவர் எனவும், சந்தேகநபர் 38 வயதுடையவர் எனவும், இருவரும் சியம்பலாகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் குறிப்பிடப்படுகிறது.

சந்தேகநபரான பெண் சிங்கப்பூர் (Singapore), ஹொங்கொங் (Hong Kong), டுபாய் (Dubai) மற்றும் ருமேனியா (Romania) ஆகிய நாடுகளில் பணியாற்றிய பின்னர், கடந்த 2022 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகைத்தந்து சந்தேக நபருடன் இந்தப் பகுதியில் வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் இரண்டரை வருடங்களாக குறித்த இருவரும் பல்வேறு நபர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி, ராஜகிரிய பிரதேசத்தில் வீதிகளில் தங்கியிருந்து அந்த நபர்களின் கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பின்னர், முகவர் நிறுவனங்கள் ஊடாக விசாவுக்கு விண்ணப்பித்து, வேலைக்கான நேர்முகத்தேர்வுக்கு அழைப்பதாக கூறி, குறித்த நபர்களிடம் இருந்து 02 முதல் 03 இலட்சம் ரூபா வரை பணம் பெற்று, அந்த கடவுச்சீட்டுக்களை தம்மிடம் வைத்திருந்ததாக குறிப்பிடப்பட்டது.

இதேவேளை சந்தேகநபர்கள் தங்கியிருந்த வீட்டை சோதனையிட்ட போது, ​​20 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹதுடுவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 7
ஏனையவை

கொழும்பில் பிரபல சுப்பர் மார்க்கெட்டுகளின் மோசமான செயல் – அபராதம் விதிப்பு

கொழும்பில் காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனை செய்த சுப்பர் மார்க்கெட்டுகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தெமட்டகொட மற்றும் மட்டக்குளிய...

25 6848f21beec56
ஏனையவை

புதிய அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் பல கைதிகள் முறைகேடான வழியில் விடுவிப்பு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரான காலப்பகுதியில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான கைதிகள்...

25 683cefcc4dfbd
ஏனையவை

அச்சுவேலியில் பெண் தலைமைத்துவ குடும்பத்தின் கோழிகளுக்கு விஷம் வைத்த விசமிகள்!

யாழ். அச்சுவேலி பகுதியில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்று வாழ்வாதாரத்துக்காக வளர்த்து வந்த கோழிகளுக்கு விஷம்...

images 1 2
ஏனையவை

சரிகமப 5வது சீசனில் கலக்கிய முன்னணி நடிகையின் மகள்..! ஆடிஷனில் செம பாராட்டு..

ரியாலிட்டி ஷோக்களுக்கு இன்று மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக சரிகமப, சூப்பர்...