24 65be307e87013
உலகம்ஏனையவைசெய்திகள்

பிறந்து 22 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு சோப்பு தண்ணீரால் நேர்ந்த சோகம்

Share

பிறந்து 22 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு சோப்பு தண்ணீரால் நேர்ந்த சோகம்

பிறந்து 22 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை சோப்பு தண்ணீரால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மாவட்டமான புதுக்கோட்டை, குளத்தூர் அருகே உள்ள கீழமேடு அங்காளம்மன் தெருவை சேர்ந்தவர் கமலேஷ் (23). இவருக்கு திருமணமான நிலையில் 2 வயதில் ஒரு மகன் உள்ளார்.

இந்நிலையில், கடந்த 22 நாட்களுக்கு முன்பு இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. சம்பவம் நடைபெற்ற நாளில் வீட்டை சுத்தம் செய்வதற்காக ஒரு வாளியில் சோப்பு தண்ணீரை கமலேஷ் வைத்திருந்தார். அந்த வாளியை எதிர்பாராதவிதமாக கமலேஷின் 2 வயது மகன் தட்டி விட்டார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக 22 நாட்களே ஆன பச்சிளங்குழந்தையின் மீது சோப்பு தண்ணீர்கொட்டியது. பின்னர், குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால், குழந்தை வரும் வழியிலே உயிரிழந்து விட்டது.

இதுகுறித்து மண்டையூர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்பு வழக்குப்பதிவு செய்த பொலிஸார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...