உலகம்ஏனையவைசெய்திகள்

காட்டுத்தீ காரணமாக வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான கனேடியர்கள்

Share

காட்டுத்தீ காரணமாக வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான கனேடியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் ஆறுதலடைந்துள்ளார்கள்.

கனடாவில் காட்டுத்தீயால் கடுமையாக பாதிக்கப்பட்ட Yellowknife பகுதியிலிருந்து, 20,000க்கும் மேலான மக்கள் ஆகத்து மாதத்தின் மத்தியில் வெளியேற்றப்பட்டார்கள்.

இந்நிலையில், தீயணைப்பு வீரர்கள் காட்டுத்தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்ததைத் தொடர்ந்து, வெளியேற்ற உத்தரவு நேற்று மதியம் விலக்கிக்கொள்ளப்பட்டது. எப்போது வீட்டுக்குத் திரும்புவோம் என ஆவலுடன் காத்திருந்தவர்களுக்கு இந்த செய்தி பெரிய ஆறுதலை அளித்துள்ளது.

நகரத்துக்கு வரும் விமானங்கள் மீண்டும் இயங்கத் துவங்கியுள்ள நிலையில், ’Welcome Home’ என்னும் பதாகை மீண்டும் தங்கள் வீடுகளுக்கு வரும் மக்களை வரவேற்கும் வகையில் Behchoko பகுதிக்கு அருகிலுள்ள நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ளது.

காட்டுத்தீக்குப் பின் நகரம் சற்று வித்தியாசமாகத்தான் உள்ளது என வீடுகளுக்குத் திரும்பும் மக்களுக்குத் தெரிவிக்கும் நகர மேயரான Rebecca Alty, காட்டுத்தீயிலிருந்து நகரத்தை பாதுகாக்கும் வகையில் பல இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆனாலும், கடைகள், நகர சேவைகள் ஆகியவை மீண்டும் இயங்கத்தொடங்குவதற்கு சற்று தாமதமாகும் என்பதையும் தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார் அவர்.

Share
தொடர்புடையது
1647574276 3019
செய்திகள்இந்தியா

பகவத் கீதையின் செய்தியை உலகமயமாக்கும் முயற்சி: 50க்கும் மேற்பட்ட தூதரகங்கள் மூலம் முன்னெடுக்கப்படுகிறது!

பகவத் கீதையின் செய்தியை உலக அரங்கிற்குக் கொண்டு செல்லும் நோக்கில், இந்திய வெளிவிவகார அமைச்சகம் முயற்சிகளை...

DSC 4271
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிவனொளிபாதமலை யாத்திரை: பொலித்தீன் இல்லாத தூய தளமாகப் பராமரிக்கத் திட்டம்!

எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சிவனொளிபாதமலை யாத்திரையை (Sri Pada Pilgrimage) அடிப்படையாகக்...

DSC 4271
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வவுனியா சிங்கர் காட்சியறையில் பயங்கர தீ விபத்து: முழுமையாக எரிந்து சேதம்!

வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்திருந்த சிங்கர் (Singer) இலத்திரனியல் காட்சியறை இன்று செவ்வாய்க்கிழமை (நவம்25) காலை...

25 68ee64d88d4b3
செய்திகள்இலங்கை

இலங்கையில் பலத்த மழை நீடிப்பு: தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு!

தென்மேற்கு வங்கக்கடலில் இன்று (நவம் 25) புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக...