“தனிமையை காதலிக்கிறேன்” – தன்னைத் தானே திருமணம் செய்துகொண்ட பிரபல மொடல்!

பிரேசில் நாட்டைச் சேர்ந்த அழகி ஒருவர் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டுள்ளார்.

தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மணமுறிவு காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.இந்த அதிசய முடிவு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்த மொடல் அழகியின் திருமணம் (வயது-33) பிரேசிலின் பிரபல கத்தோலிக்க தேவாலயத்தில் இடம்பெற்றுள்ளது. திருமணத்தில் அவரது பெற்றோர். நண்பர்கள் உள்ளிட்ட பலர் பங்குபற்றியுள்ளனர்.

தனது இந்த திருமண முடிவு குறித்து மொடல் அழகி கிரிஸ் கேலரா தெரிவிக்கையில்,
“எனது சொந்த வாழ்க்கையில் நான் முகம்கொடுத்த பல்வேறு பிரச்சினைகள் என்னை இந்த முடிவுக்கு தூண்டின. இதனால் தனிமையில் வாழ்வது சிறந்த உணர்வு என்று புரிந்துகொண்டேன். இதனை கொண்டாடும் வகையில் என்னை நானே திருமணம் செய்துள்ளேன்.” – என்றுள்ளார்.

இந்த வினோத திருமணங்கள் பலரால் அதிசயிக்கப்பட்டு பார்க்கப்பட்டாலும், வேறு பலரால் விமர்சிக்கப்பட்டும் வருகின்றன. எனினும் உலகில் அண்மைக்காலமாக இவ்வாறான வினோத திருமணங்கள் அதிகரித்துள்ளன.

செக்ஸ் பொம்மையை திருமணம் செய்துகொண்ட பாடிபில்டர், ஒரு ஆண் தன்னைத்தானே திருமணம் செய்துகொள்வது, ஒரு பெண் தன்னைத்தானே திருமணம் செய்துகொள்வது போன்ற வினோத திருமணங்கள் அண்மையில் இடம்பெற்றிருந்தன. அந்த வகையில், தற்போது இந்த வினோத பட்டியலில் பிரேசில் பிரபல மொடல் அழகி கிரிஸ் கேலராவும் இணைந்துள்ளார்.

mo

Exit mobile version