பரபரப்பை கிளப்பிய பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸின் விவாகரத்து
ஏனையவை

பரபரப்பை கிளப்பிய பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸின் விவாகரத்து

Share

பரபரப்பை கிளப்பிய பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸின் விவாகரத்து

அமெரிக்க பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸை விவகாரத்து செய்வதை அவரது கணவர் சாம் அஸ்காரி உறுதிப்படுத்தியுள்ளார்.

பாப் இசையுலகில் பிரபலமான பிரிட்னி ஸ்பியர்ஸ், ஈரானிய-அமெரிக்க நடிகரும் உடற்பயிற்சி அளிக்கும் பயிற்சியாளருமான சாம் அஸ்காரியை 2016ஆம் ஆண்டு சந்தித்தார்.

அதனைத் தொடர்ந்து இந்த ஜோடி 2021ஆம் ஆண்டில் திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்டது. பின்னர், கடந்த 2022ஆம் ஆண்டு சூன் மாதம் சாம் அஸ்காரியை திருமணம் செய்துகொண்டார் பிரிட்னி.

இந்த நிலையில் தான் சமீபத்தில் பிரிட்னி அவரது கணவர் சாம் அஸ்காரியை பிரிந்துவிட்டதாக இணையத்தில் செய்திகள் பரவின.

தற்போது வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சாம் அஸ்காரியே சமூக வலைதளப் பக்கத்தில் தங்கள் விவகாரத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

அவரது பதிவில், ‘ஆறு ஆண்டுகள் ஒருவருக்கொருவர் அன்பு மற்றும் அர்ப்பணிப்புக்குப் பிறகு, நானும் என் மனைவியும் எங்கள் பயணத்தை ஒன்றாக முடிக்க முடிவு செய்துள்ளோம்.

நாங்கள் ஒருவருக்கொருவர் வைத்திருக்கும் அன்பையும், மரியாதையையும் நாங்கள் கடைபிடிப்போம். அவருக்கு எப்போதும் நான் சிறந்தவராக இருக்க விரும்புகிறேன்.

மோசமான விடயங்கள் நடக்கின்றன. தனிப்பட்ட உரிமையை கோருவது கேலிக்குரியதாக தெரிகிறது. எனவே ஊடகங்கள் உட்பட அனைவரையும் பொறுப்புடன் இருக்குமாறு நான் கேட்டுக் கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 30
ஏனையவை

மின்சாரக் கட்டண உயர்வு: ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் நடைமுறை!

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக்...

image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...