இரண்டம் மாடி ஜன்னலில் இருந்து விழுந்த குழந்தை: சோகத்தில் மக்கள்
உலகம்ஏனையவைசெய்திகள்

இரண்டம் மாடி ஜன்னலில் இருந்து விழுந்த குழந்தை: சோகத்தில் மக்கள்

Share

இரண்டம் மாடி ஜன்னலில் இருந்து விழுந்த குழந்தை: சோகத்தில் மக்கள்

பிரித்தானியாவில் இரண்டாவது மாடியின் ஜன்னலில் இருந்து ஆண் குழந்தை ஒன்று கீழே விழுந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் பர்ன்லி(Burnley) பகுதியில் உள்ள கட்டிடத்தின் இரண்டாவது மாடி ஜன்னலில் இருந்து ஆண் குழந்தை ஒன்று கீழே விழுந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாதிப்புக்கு உள்ளான ஆண் குழந்தைக்கு 1 வயது எனவும், இந்த விபத்து சம்பவத்தால் பலத்த காயமடைந்து இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இதனால் குழந்தை உடனடியாக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் ராயல் மான்செஸ்டர் குழந்தைகள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் குழந்தை எவ்வாறு இரண்டாவது மாடி ஜன்னலில் இருந்து கீழே விழுந்தது என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

அத்துடன் ஹிப் சாலையில்(Heap Street) உள்ள வீட்டிற்கு வெளியே ஏற்பட்ட இந்த சம்பவத்தில் குழந்தைக்கு உதவிய மக்களை சந்தித்து அவர்களிடம் இது குறித்து விவரங்களை சேகரிக்க உற்று நோக்கி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இத்தகைய இக்கட்டான நேரத்தில் பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்திடம் தங்களது எண்ணங்கள் இருப்பதாக DI மார்க் சாண்டர்ஸ் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
BIA 692136
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய வசதி அறிமுகம் – பயணிகளுக்கு கிடைத்துள்ள நன்மை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்காக புதிய வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய, பிரத்தியேகமாக தானியங்கி...

25 68f3aa6750683
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது! – தகவல் கசிவு குறித்து கவலை

யாழ்ப்பாணம் – மணியம் தோட்டப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர் போதைப்பொருளுடன் நேற்று...

Estate
செய்திகள்இலங்கை

பெருந்தோட்டத் தொழிலாளர் சம்பளப் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு: கம்பனிகளின் புறக்கணிப்பால் குழப்பம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான சம்பள நிர்ணய சபை கூட்டம் நேற்று (அக்டோபர் 18)...

images 2
செய்திகள்இலங்கை

சந்திரிக்கா குமாரதுங்க காலமானதாகப் பரவும் செய்தி – பொதுமக்கள் அவதானமாக இருக்க அறிவுறுத்தல்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க காலமானதாகச் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாகச் செய்திகள் பரவி வருகின்றன....