இரண்டம் மாடி ஜன்னலில் இருந்து விழுந்த குழந்தை: சோகத்தில் மக்கள்
உலகம்ஏனையவைசெய்திகள்

இரண்டம் மாடி ஜன்னலில் இருந்து விழுந்த குழந்தை: சோகத்தில் மக்கள்

Share

இரண்டம் மாடி ஜன்னலில் இருந்து விழுந்த குழந்தை: சோகத்தில் மக்கள்

பிரித்தானியாவில் இரண்டாவது மாடியின் ஜன்னலில் இருந்து ஆண் குழந்தை ஒன்று கீழே விழுந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் பர்ன்லி(Burnley) பகுதியில் உள்ள கட்டிடத்தின் இரண்டாவது மாடி ஜன்னலில் இருந்து ஆண் குழந்தை ஒன்று கீழே விழுந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாதிப்புக்கு உள்ளான ஆண் குழந்தைக்கு 1 வயது எனவும், இந்த விபத்து சம்பவத்தால் பலத்த காயமடைந்து இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இதனால் குழந்தை உடனடியாக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் ராயல் மான்செஸ்டர் குழந்தைகள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் குழந்தை எவ்வாறு இரண்டாவது மாடி ஜன்னலில் இருந்து கீழே விழுந்தது என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

அத்துடன் ஹிப் சாலையில்(Heap Street) உள்ள வீட்டிற்கு வெளியே ஏற்பட்ட இந்த சம்பவத்தில் குழந்தைக்கு உதவிய மக்களை சந்தித்து அவர்களிடம் இது குறித்து விவரங்களை சேகரிக்க உற்று நோக்கி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இத்தகைய இக்கட்டான நேரத்தில் பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்திடம் தங்களது எண்ணங்கள் இருப்பதாக DI மார்க் சாண்டர்ஸ் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...