உலகம்ஏனையவைசெய்திகள்

கேரளாவில் பயங்கர விபத்து: 5 பேர் பரிதாப மரணம்

Share

கேரளாவில் பயங்கர விபத்து: 5 பேர் பரிதாப மரணம்

கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் சென்ற பேருந்து, ஆட்டோ மீது மோதியதால் 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி அருகே குட்டிப்பாறை பகுதியை சேர்ந்த 7 பேர் நேற்று மாலை ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அப்துல் மஜித்(55) என்பவர் ஆட்டோ ஓட்டினார். அவர்கள் செட்டியங்காடு என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்களின் பேருந்து எதிரே வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்து ஆட்டோ மீது மோதியதில் ஆட்டோ சுக்கு நூறாக நொறுங்கியது.

இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் அப்துல் மஜித், தஸ்னிமா(33), அவரது குழந்தைகள் ரின்ஷா பாத்திமா(12), ரைஹா பாத்திமா(4), சகோதரி முஹ்சினா(35) ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஆட்டோவில் இருந்த 2 பேர் படுகாயமடைந்தனர்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிஸார் விரைந்துவந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தந்தையின் அழுகிய உடலுடன் 3 நாட்களாக இருந்த மகன்: துர்நாற்றம் வீசியதால் சந்தேகம்
தந்தையின் அழுகிய உடலுடன் 3 நாட்களாக இருந்த மகன்: துர்நாற்றம் வீசியதால் சந்தேகம்
சாலையின் திருப்பத்தில் பேருந்து வேகமாக திரும்பியதால் தவறுதலாக ஆட்டோ மீது மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது என பார்த்தவர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் ஆட்டோ ஒட்டி வந்த மஜித், தனது மகளுக்கு சில நாள்கள் திருமணம் நடைபெற உள்ள நிலையில் உயிரிழந்துள்ளார். மேலும், தஸ்னிமா என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் தான் ஐக்கிய அரபு நாட்டில் இருந்து சொந்த நாட்டிற்கு வந்துள்ளார். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
62a15150 5261 11f0 a2ff 17a82c2e8bc4.jpg
செய்திகள்உலகம்

வரலாறு படைத்த ஜோஹ்ரான் மம்தானி: நியூயார்க் நகரின் முதல் முஸ்லிம் மற்றும் இளம் மேயராகத் தேர்வு!

அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயராக இருந்தவர் எரிக் ஆடம்ஸ். இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டு...

11ad0a96d3aaa13d73a54e4883f2f59c
உலகம்செய்திகள்

கென்டகி விமான நிலையத்தில் கோர விபத்து: சரக்கு விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்தது – 3 பேர் பலி!

அமெரிக்காவின் கென்டகி மாகாணம், லுயிஸ்விலா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹவாய் மாகாணம் ஹொனொலுலு நகருக்கு...

23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...