உலகம்ஏனையவைசெய்திகள்

கேரளாவில் பயங்கர விபத்து: 5 பேர் பரிதாப மரணம்

Share

கேரளாவில் பயங்கர விபத்து: 5 பேர் பரிதாப மரணம்

கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் சென்ற பேருந்து, ஆட்டோ மீது மோதியதால் 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி அருகே குட்டிப்பாறை பகுதியை சேர்ந்த 7 பேர் நேற்று மாலை ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அப்துல் மஜித்(55) என்பவர் ஆட்டோ ஓட்டினார். அவர்கள் செட்டியங்காடு என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்களின் பேருந்து எதிரே வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்து ஆட்டோ மீது மோதியதில் ஆட்டோ சுக்கு நூறாக நொறுங்கியது.

இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் அப்துல் மஜித், தஸ்னிமா(33), அவரது குழந்தைகள் ரின்ஷா பாத்திமா(12), ரைஹா பாத்திமா(4), சகோதரி முஹ்சினா(35) ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஆட்டோவில் இருந்த 2 பேர் படுகாயமடைந்தனர்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிஸார் விரைந்துவந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தந்தையின் அழுகிய உடலுடன் 3 நாட்களாக இருந்த மகன்: துர்நாற்றம் வீசியதால் சந்தேகம்
தந்தையின் அழுகிய உடலுடன் 3 நாட்களாக இருந்த மகன்: துர்நாற்றம் வீசியதால் சந்தேகம்
சாலையின் திருப்பத்தில் பேருந்து வேகமாக திரும்பியதால் தவறுதலாக ஆட்டோ மீது மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது என பார்த்தவர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் ஆட்டோ ஒட்டி வந்த மஜித், தனது மகளுக்கு சில நாள்கள் திருமணம் நடைபெற உள்ள நிலையில் உயிரிழந்துள்ளார். மேலும், தஸ்னிமா என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் தான் ஐக்கிய அரபு நாட்டில் இருந்து சொந்த நாட்டிற்கு வந்துள்ளார். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...