5 34
ஏனையவை

மூத்த தமிழ் கட்சிகளின் பாரிய தோல்வி : காரணத்தை உடைத்த மக்கள்

Share

மூத்த தமிழ் கட்சிகளின் பாரிய தோல்வி : காரணத்தை உடைத்த மக்கள்

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தலைமையிலான ஜே.வி.பி பாரிய வெற்றியை தன்வசப்படுத்தியுள்ளது.

பாரம்பரியமாக அரசியலில் இருந்த மூத்த அரசியல்வாதிகள் பலரின் அரசியல் சாம்ராஜ்யம் வீழ்த்தப்பட்டு புதிய அரசாங்க முறைமை உருவாக்கப்பட்டமை தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

தமிழர் பிரதேசங்களிலும் மக்களின் வாக்குகளானது பாரம்பரிய தமிழ்கட்சிகளை விடுத்து அநுரவின் கட்சியை நோக்கி நகர்ந்துள்ளமை தமிழ் அரசியல்வாதிகள் மத்தியிலும் மற்றும் தமிழ் அரசியல் சமூகத்திலும் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், இது தொடர்பாக ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவித்துள்ள மக்கள் “50 வருடக்காலம் நடந்த அரசியல் கலாச்சாரத்திற்கு நாங்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளோம்.

ஏற்கனவே, ஆட்சியிலிருந்த ஆட்சியாளர்கள் மீதான அதிருப்தியின் வெளிபாடுதான் தற்போது வந்துள்ள மாற்றம்.

நேர்மையாக அரசியல் நடத்தினால் மாத்திரமே அரசியல் அதிகாரம் எதிர்காலத்தில் உண்டு என்பதை அரசியல்வாதிகளுக்கு நினைவுவூட்டியுள்ளளோம்.

இவ்வளவு காலம் தொடர்ந்த இன மற்றும் மத வேறுப்பாட்டிலான அரசியலை தகர்த்தி இனி வரும் காலங்களில் ஒற்றுமையாக வயோதிப அரசியல்வாதிகளை நீக்கி இளைஞர்களுக்கான வாய்ப்பை வழங்க தகுந்த சூழலை ஏற்படுத்தியுள்ளளோம்.

14 ஆம் திகதி நாடாளுமன்றத்தை சுத்தம் செய்வாத ஜனாதிபதி தெரிவித்திருந்தார் அதே போல தற்போது அவர் அதை நடத்திக்காட்டியுள்ளார்.

அத்தோடு, தமிழ் பிரதேசங்களின் மூத்த தமிழ் கட்சிகளின் பிளவும் மற்றும் ஒற்றுமையின்மையே நாங்கள் மாற்றத்தை தேட காரணம்.

கடந்த காலத்தில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக தற்போது அவர் தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில் நாங்கள் எதிர்பாத்தது மாற்றம் அந்த மாற்றத்தை நாட்டின் மக்களாக நாங்கள் ஏற்படித்தியுள்ளதுடன் இனி அபிவிருத்தயை நோக்கி பயணிப்போம் என நம்புகின்றோம்” என தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...

26 6960cb1db7fc8
ஏனையவை

கிரீன்லாந்து விவகாரம்: நேட்டோவின் இருப்பையே கேள்விக்குறியாக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் நகர்வு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தை இணைப்பதில் காட்டி வரும் தீவிரம், இரண்டாம் உலகப் போருக்குப்...