6 30
ஏனையவை

சுமந்திரனின் தேர்தல் தோல்வி: தமிழ் தேசியத்திற்கு கிடைத்த வெற்றி!

Share

சுமந்திரனின் தேர்தல் தோல்வி: தமிழ் தேசியத்திற்கு கிடைத்த வெற்றி!

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சுமந்திரனின் தோல்வி தமிழ் தேசியத்திற்கு கிடைத்த வெற்றி என அமெரிக்க (புலம் பெயர்ந்த) தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயத்தினை அவர்கள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “நாடாளுமன்றத் தேர்தலில் சுமந்திரன் தோல்வியடைந்தமை தமிழ் மக்களின் எதிர்காலத்திற்கான ஒரு முக்கியமான தருணமாகும்.

சுமந்திரன் தமிழர்களின் நலன்களை உண்மையாகப் பிரதிநிதித்துவப்படுத்தத் தவறிவிட்டார்.

மாறாக, அவர் தனது செல்வம், அதிகாரம் மற்றும் அந்தஸ்தைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளித்தார், பெரும்பாலும் சிங்களக் கருத்தியல் மற்றும் சிங்கள தேசியவாதத்துடன் தன்னை இணைத்துக் கொண்டார்.

வடக்கு மாகாண சபைக்கும் அதன் முதலமைச்சருக்கும் எதிராக அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் யாவரும் அறிந்ததே.

மேலும், தமிழினத்துக்காகத் தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்த நமது வீரத் தியாகிகளின் தியாகங்களை அவர் சிதைத்தார்.

இந்த முடிவு 146,000 வீர ஆன்மாக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கிறது. அது அவனது கர்மாவின் பலன்.

சிங்கள நாடாளுமன்றம் , ஜெனிவா, நியூயார்க், வாஷிங்டன் ஆகியவற்றில் அவரது அறிக்கைகள் இப்போது எந்த மதிப்பையும் கொண்டிருக்கவில்லை.

தமிழ் மக்களின் சுதந்திரம் மற்றும் இறையாண்மைக்கான போராட்டத்தில் கடவுள் ஆசீர்வதிக்கட்டும்.” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...