9 30
ஏனையவை

ஜனாதிபதியின் நாடாளுமன்ற உரை தொடர்பில் வெளியான தகவல்

Share

ஜனாதிபதியின் நாடாளுமன்ற உரை தொடர்பில் வெளியான தகவல்

10வது நாடாளுமன்றத்தின் ஆரம்ப அமர்வில் முற்பகல் 11.30 மணிக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake), தமது அரசாங்க கொள்கை அறிக்கையை சமர்பிப்பார் என நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

10ஆவது நாடாளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு நவம்பர் 21ஆம் திகதி முற்பகல் 10:00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

அன்றைய தினம் முற்பகல் 11:30 மணியளவில் ஜனாதிபதி, அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை சமர்ப்பிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நவம்பர் 21 ஆம் திகதி பிற்பகல் 3.00 மணிக்கு ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை சமர்பிப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இந்த அறிவித்தல் வெளியாகியுள்ளது.

அரசியலமைப்பின் 33(a) பிரிவின்படி, நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் ஆரம்பத்தில் அரசாங்கக் கொள்கை அறிக்கையை சமர்ப்பிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது.

அத்துடன்,அரசியலமைப்பின் 33 (b) யின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளபடி, ஜனாதிபதி, நாடாளுமன்றத்தின் சம்பிரதாய அமர்வுகளுக்கு தலைமை தாங்குவதற்கும் உரிமையுடையவர்.

இந்த அமர்வின் போது, கொள்கை அறிக்கையின் மூலம் அரசாங்கத்தின் தொலைநோக்கு மற்றும் வரவிருக்கும் முன்முயற்சிகள் பற்றிய விரிவான விளக்கத்தை ஜனாதிபதி நாடாளுமன்றில் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 7
ஏனையவை

கொழும்பில் பிரபல சுப்பர் மார்க்கெட்டுகளின் மோசமான செயல் – அபராதம் விதிப்பு

கொழும்பில் காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனை செய்த சுப்பர் மார்க்கெட்டுகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தெமட்டகொட மற்றும் மட்டக்குளிய...

25 6848f21beec56
ஏனையவை

புதிய அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் பல கைதிகள் முறைகேடான வழியில் விடுவிப்பு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரான காலப்பகுதியில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான கைதிகள்...

25 683cefcc4dfbd
ஏனையவை

அச்சுவேலியில் பெண் தலைமைத்துவ குடும்பத்தின் கோழிகளுக்கு விஷம் வைத்த விசமிகள்!

யாழ். அச்சுவேலி பகுதியில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்று வாழ்வாதாரத்துக்காக வளர்த்து வந்த கோழிகளுக்கு விஷம்...

images 1 2
ஏனையவை

சரிகமப 5வது சீசனில் கலக்கிய முன்னணி நடிகையின் மகள்..! ஆடிஷனில் செம பாராட்டு..

ரியாலிட்டி ஷோக்களுக்கு இன்று மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக சரிகமப, சூப்பர்...