மாத்தளை பொது வைத்தியசாலையில் கைதான போலி வைத்தியர்
மாத்தளை பொது வைத்தியசாலையில் (District General Hospital Matale) வைத்தியர் என்ற போர்வையில் செயற்பட்ட போலி வைத்தியர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது சம்பவம் நேற்று (20.11.2024) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி (Ratnapura) – இறக்குவானை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இரண்டு வாரங்களாக வைத்தியர் போலக் கடமையாற்றி வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
மாத்தளை பொது வைத்தியசாலையில் கைதான போலி வைத்தியர் | Fake Doctor Arrested At Matale General Hospital
சந்தேக நபரின், நடவடிக்கைகளில் சந்தேகம் எழுந்தமையினால் சக வைத்தியர்களினால் காவல்துறையினரிடம் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் அவரைக் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.