மீண்டும் தரம் உயர்த்தப்பட்ட சிறிலங்கன் எயார்லைன்ஸ்!
குறைக்கப்பட்ட இலங்கை தேசிய விமான சேவையான சிறிலங்கன் விமான சேவையின் (Srilankan Airlines) பாதுகாப்பு மதிப்பீட்டை, உலகின் முன்னணி விமான தரமதிப்பீட்டு நிறுவனம் “Airline Ratings” மீண்டும் உயர்த்தியுள்ளது.
அந்த தரவரிசைகளை தரமிறக்குவதற்கு காரணமான சம்பவம் தொடர்பில் இலங்கை நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்தமையே அதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த செப்டெம்பர் 21 ஆம் திகதி அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்ற சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தின் கேப்டன் ஒருவர் விமானி அறைக்குள் நுழைய அனுமதிக்க மறுத்த சம்பவத்தைத் தொடர்ந்து சிறிலங்கன் எயார்லைன்ஸின் பாதுகாப்பு மதிப்பீடு ஆறு நட்சத்திரங்களாகக் குறைக்கப்பட்டது.
விமானம் பறக்கும் போது துணை விமானி கழிவறைக்கு சென்று திரும்பிய போது, பிறகு கேப்டன் விமானி கதவை திறக்கவில்லை.
விமானி கழிவறைக்குள் நுழைந்ததும் கேப்டன் கதவை மூடிவிட்டதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாகின.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சிறிலங்கன் எயார்லைன்ஸ், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
- breaking news
- breaking news sri lanka
- english news
- Featured
- news from sri lanka
- news in sri lanka today
- news sri lanka
- newsfirst sri lanka
- sri lanka
- sri lanka latest news
- sri lanka news
- sri lanka news live
- sri lanka news sinhala
- sri lanka news tamil
- sri lanka news today
- Sri lanka politics
- sri lanka tamil news today 2023
- sri lanka trending
- tamil lanka news
- tamil sri lanka news
- tv news