1 43
இலங்கைஏனையவைசெய்திகள்

அநுர அரசாங்கத்தின் மற்றுமொரு அதிரடி – அமைச்சர்களுக்கு விதிக்கப்படும் தடை

Share

அநுர அரசாங்கத்தின் மற்றுமொரு அதிரடி – அமைச்சர்களுக்கு விதிக்கப்படும் தடை

இலங்கையில் அமைச்சு பதவிகளை வகிக்கும் அரசியல்வாதிகள் அரசாங்கத்திற்கு சொந்தமான தங்குமிட விடுதிகள் மற்றும் சுற்றுலா இல்லங்களை முறையற்ற வகையில் பயன்படுத்தும் நடவடிக்கை நிறுத்தப்படும் என, அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் பல்வேறு அமைச்சுக்களினால் நடத்தப்படும் உல்லாச விடுதிகளில் அமைச்சர்களுக்கு அறைகள் ஒதுக்கப்படுகின்றன. அவற்றை குறைந்த விலையில் ஏனையவர்களுக்கு அமைச்சர்கள் வழங்கும் நடைமுறை மாற்றப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

நாட்டில் எந்தவொரு இலங்கையர்களும் இந்த விடுமுறை விடுதிகள் பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய முறைமையொன்று தயாரிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான உல்லாச விடுதிகள் மற்றும் சுற்றுலா இல்லங்கள் மிகச் சிறந்த முறையில் பயன்படுத்துவதற்கு பொருத்தமான முறையை பரிந்துரைக்க நியமிக்கப்பட்ட குழுவின் ஆலோசனையின் அடிப்படையில் 09 சுற்றுலா இல்லங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதற்காக 166.93 மில்லியன் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதுடன், அந்த வேலைத்திட்டங்கள் இந்த வருடத்திற்குள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

தற்போது, ​​பல்வேறு அரசு அமைச்சகங்களால் நடத்தப்படும் ஏராளமான விடுதிகள் உள்ளன. அதில் சில விடுதிகளில் அமைச்சர்களுக்கு அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
articles2FVIVe6pP2puuipbGIu7f9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாவலப்பிட்டி பிரதேச செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மின்னஞ்சலால் பரவிய பதற்றம் – தேடுதல் வேட்டை!

நாவலப்பிட்டி, பஸ்பாகே கோரள பிரதேச செயலகத்தின் களஞ்சிய அறையில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட...

lXCde1e0G7ygeggbmYlO4CSM1NM
இலங்கைசெய்திகள்

பண்டிகைக் காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு ஜாக்பாட்: ஒரே நாளில் 62 மில்லியன் ரூபாய் வருமானம்!

நத்தார் பண்டிகை மற்றும் தற்போது நடைபெற்று வரும் பாடசாலை விடுமுறைக்காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளின் சுங்க வரி...

MediaFile 1 7
செய்திகள்அரசியல்இலங்கை

டித்வா புயல் பாதிப்பு: விவசாய மற்றும் மீனவ ஓய்வூதியம் பெறுவதற்கான கால எல்லை நீடிப்பு!

‘டித்வா’ (Titli) புயல் மற்றும் நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக, விவசாய மற்றும் மீனவ ஓய்வூதியதாரர்கள்...

Nalinda Jayathissa
செய்திகள்அரசியல்இலங்கை

நிபந்தனைகளை மீறினால் அலைவரிசைகளின் அனுமதிப்பத்திரம் ரத்து: அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை!

தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திர நிபந்தனைகள் மீறப்படும் பட்சத்தில், அவற்றை மீளப்பெறும் அதிகாரம் பாடத்திற்கு பொறுப்பான...