1 43
இலங்கைஏனையவைசெய்திகள்

அநுர அரசாங்கத்தின் மற்றுமொரு அதிரடி – அமைச்சர்களுக்கு விதிக்கப்படும் தடை

Share

அநுர அரசாங்கத்தின் மற்றுமொரு அதிரடி – அமைச்சர்களுக்கு விதிக்கப்படும் தடை

இலங்கையில் அமைச்சு பதவிகளை வகிக்கும் அரசியல்வாதிகள் அரசாங்கத்திற்கு சொந்தமான தங்குமிட விடுதிகள் மற்றும் சுற்றுலா இல்லங்களை முறையற்ற வகையில் பயன்படுத்தும் நடவடிக்கை நிறுத்தப்படும் என, அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் பல்வேறு அமைச்சுக்களினால் நடத்தப்படும் உல்லாச விடுதிகளில் அமைச்சர்களுக்கு அறைகள் ஒதுக்கப்படுகின்றன. அவற்றை குறைந்த விலையில் ஏனையவர்களுக்கு அமைச்சர்கள் வழங்கும் நடைமுறை மாற்றப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

நாட்டில் எந்தவொரு இலங்கையர்களும் இந்த விடுமுறை விடுதிகள் பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய முறைமையொன்று தயாரிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான உல்லாச விடுதிகள் மற்றும் சுற்றுலா இல்லங்கள் மிகச் சிறந்த முறையில் பயன்படுத்துவதற்கு பொருத்தமான முறையை பரிந்துரைக்க நியமிக்கப்பட்ட குழுவின் ஆலோசனையின் அடிப்படையில் 09 சுற்றுலா இல்லங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதற்காக 166.93 மில்லியன் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதுடன், அந்த வேலைத்திட்டங்கள் இந்த வருடத்திற்குள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

தற்போது, ​​பல்வேறு அரசு அமைச்சகங்களால் நடத்தப்படும் ஏராளமான விடுதிகள் உள்ளன. அதில் சில விடுதிகளில் அமைச்சர்களுக்கு அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...