இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத் திருத்தத்திற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) ஏகமனதாக ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதிய கட்டணங்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும்.
புதிய கட்டண விபரங்கள்:
-
0 – 30 அலகுகள்: 4.3% அதிகரிப்பு (மாதாந்தக் கட்டணம் 15 ரூபாவால் உயர்வு).
-
31 – 60 அலகுகள்: 6.9% அதிகரிப்பு (மாதாந்தக் கட்டணம் 45 ரூபாவால் உயர்வு).
-
61 – 180 அலகுகள்: சராசரியாக 6.9% முதல் 7.2% வரை அதிகரிப்பு.
-
180 அலகுகளுக்கு மேல்: அதிகபட்சமாக 25% கட்டண அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படும்.
கடந்த பெப்ரவரி 13 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட இந்த 13.56% ஒட்டுமொத்த கட்டண அதிகரிப்பு யோசனையானது, எரிபொருள் செலவு மற்றும் உற்பத்திச் செலவுகளை ஈடுகட்டும் நோக்கில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனினும், குறைந்த அலகுகளைப் பயன்படுத்தும் சாதாரண நுகர்வோருக்குப் பாரிய பாதிப்பு ஏற்படாத வகையில் இந்தத் திருத்தம் அமைந்துள்ளதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

