கடன் வாங்கும் வரம்பை அதிகரிக்க கோரி அரசாங்கம் நாடாளுமன்றத்திடம் கோரிக்கை!! வெளியான தகவல்
அரசியல்இலங்கைஏனையவைசெய்திகள்

கடன் வாங்கும் வரம்பை அதிகரிக்க கோரி அரசாங்கம் நாடாளுமன்றத்திடம் கோரிக்கை!! வெளியான தகவல்

Share

கடன் வாங்கும் வரம்பை அதிகரிக்க கோரி அரசாங்கம் நாடாளுமன்றத்திடம் கோரிக்கை!! வெளியான தகவல்

ஒதுக்கீட்டுச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதன் மூலம் பொதுச் செலவுகளுக்கு நிதியளிப்பதற்காக, கடன் வாங்கும் வரம்பை 9,000 பில்லியன் ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் நாடாளுமன்றத்தின் அனுமதியை கோரியுள்ளது.

நாட்டிற்கான நிதி திரட்ட சர்வதேச சந்தைக்கான அணுகலை இழந்துள்ள நிலையில், உள்நாட்டு கடன்கள் மூலம் கடன் சேவை கொடுப்பனவுகள், தொடர்ச்சியான செலவுகள் மற்றும் நலன்புரி செலவுகளை ஈடுசெய்ய அரசாங்கத்திற்கு இந்த திட்டம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடன் பெறுவதற்கான உச்ச வரம்பு தற்போது 4,979 பில்லியனாக உள்ள நிலையில் 13,979 பில்லியனாக அதிகரிப்பதற்கான சட்டமூலத்தை நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கடந்த புதன்கிழமை வெளியிட உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் பொது நிதி தொடர்பான அதிகாரங்கள் நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளதால், 2022 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தை திருத்துவதன் மூலம் திறைசேரி நடவடிக்கைகளின் சேவைச் செலவு மற்றும் மூலதனச் செலவினங்களை அதிகரிக்க, நாடாளுமன்றில் அனுமதி கோரப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...

23 2
இலங்கைசெய்திகள்

விரயமாகும் இறக்குமதி செய்யப்பட்ட உப்பு.. கடும் நெருக்கடியில் அரசாங்கம்!

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு, துறைமுகத்தில் உள்ள சில கொள்கலன்களில் இருந்து உருகி வெளியேறி வருவதாக கொள்கலன்...

22 4
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை! எச்சரிக்கும் அதிகாரிகள்

குடும்ப வன்முறை சம்பவங்கள் குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். இந்த குடும்ப வன்முறை...

20 2
இலங்கைசெய்திகள்

கிளிநொச்சியில் விபத்துக்குள்ளான எரிபொருள் பாரவூர்தி.. ஒருவர் படுகாயம்!

கிளிநொச்சி – பூநகரி பகுதியில் எரிபொருள் பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து...