images 5
ஏனையவை

காணாமல் போன மலேசிய விமானத்தைத் தேடும் பணிகள் மீண்டும் ஆரம்பம்: டிசம்பர் 30-இல் தேடல் தொடக்கம்!

Share

காணாமல் போய் ஒரு தசாப்தத்திற்கும் (பத்து ஆண்டுகள்) மேலாகியும் கண்டுபிடிக்கப்படாத மலேசிய வானூர்தியை (MH370) தேடும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மலேசிய போக்குவரத்து அமைச்சகம் இன்று (டிசம்பர் 3) அறிவித்துள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்குச் செல்லும் வழியில் போயிங் 777 ரக விமானம், 227 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களுடன் காணாமல் போனது.

அதன் பின்னர் குறித்த வானூர்தியைத் தேடிப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும், அனைத்தும் பலனளிக்கவில்லை. குறித்த வானூர்தியைத் தேடும் பணிகள் 2025, டிசம்பர் 30 ஆம் திகதியன்று மீள ஆரம்பிக்கப்படும் என மலேசிய போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வானூர்தியைக் கண்டுபிடிப்பதற்கான அதிக நிகழ்தகவு இருப்பதாக மதிப்பிடப்பட்ட இலக்கு பகுதியில் இந்தத் தேடல் மேற்கொள்ளப்படவுள்ளதாக மலேசிய அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும், அந்த இடம் எது என்பது குறித்த தகவலை மலேசிய அரசாங்கம் வெளியிடவில்லை.

முன்னதாக, மலேசியப் புலனாய்வாளர்கள் ஆரம்பத்தில் குறித்த வானூர்தி வேண்டுமென்றே திசை திருப்பப்பட்டதற்கான சாத்தியக் கூறுகளையும் நிராகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 30
ஏனையவை

மின்சாரக் கட்டண உயர்வு: ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் நடைமுறை!

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக்...

image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...