24 662ef8f9a9e9b
இலங்கைஏனையவைசெய்திகள்

கொழும்பில் மாணவர்களுக்கு இடையில் மோதல் : காதலால் விபரீதம்

Share

கொழும்பில் மாணவர்களுக்கு இடையில் மோதல் : காதலால் விபரீதம்

காதல் உறவின் அடிப்படையில் தாக்குதலுக்கு உள்ளான இரு இளைஞர்களும் யுவதியொருவரும் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் முல்லேரிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அத்துடன், சந்தேகநபர்கள் 15 பேரை கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

முல்லேரிய பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவருடன் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் சில காலமாக காதல் உறவை வளர்த்துக் கொள்ள முயற்சித்து வந்த நிலையில் அதனை மாணவி நிராகரித்துள்ளார்.

இது குறித்து மாணவன் தொடர்ந்து வற்புறுத்தியதை அடுத்து, இது குறித்து தனது மூத்த சகோதரரிடம் மாணவி தெரிவித்துள்ளார்.

அண்மையில் பாடசாலையில் இடம்பெற்ற விளையாட்டு விழாவில் குறித்த மாணவியின் சகோதரனும் கலந்துகொண்டிருந்த நிலையில் குறித்த மாணவனை சந்தித்து, சகோதரியை தொந்தரவு செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.

பதிலுக்கு, மாணவர் தொலைபேசியில் அழைப்பு விடுத்து அவரது நண்பர்கள் குழுவை அந்த இடத்திற்கு வரவழைத்தார். பாடசாலை வளாகத்திற்கு வெளியே, குழு சகோதரர் தரப்பினரைத் தாக்கியது.

மாணவியின் சகோதரர்கள் இருவரையும், சகோதரர் ஒருவரின் மனைவியையும் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர்கள் தாக்கப்பட்ட விதம் கையடக்க தொலைபேசிகள் மற்றும் சிசிடிவி கமராக்களில் பதிவாகியுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த இரு சகோதரர்களும் பெண்ணும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் முல்லேரிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 15 பேரை கைது செய்துள்ளனர்.

நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...