11 12
ஏனையவை

மக்கள்தொகையை அதிகரிக்க புதிய சட்டம் இயற்றும் ரஷ்யா., மீறினால் லட்சங்களில் அபராதம்

Share

மக்கள்தொகையை அதிகரிக்க புதிய சட்டம் இயற்றும் ரஷ்யா., மீறினால் லட்சங்களில் அபராதம்

ரஷ்ய அரசு புதிய சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த சட்டத்தின் கீழ், நாட்டில் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று ஊக்குவிப்பவர்களுக்கு தடை விதிக்கப்படும்.

மக்கள் குழந்தைகளைப் பெறுவதைத் தடுக்கும் எந்த உள்ளடக்கத்தையும் எந்த சமூக ஊடக தளத்திலும் வெளியிட முடியாது.

ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான ஸ்டேட் டூமாவும் இது தொடர்பான முன்மொழிவை நவம்பர் 12 அன்று நிறைவேற்றியுள்ளது.

இந்த மசோதா இப்போது நவம்பர் 20-ஆம் திகதி மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும். அதனைக் கடந்து சென்ற பிறகு, அது விளாடிமிர் புடினின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். புதினின் ஒப்புதலுக்குப் பிறகு இந்த சட்டம் அமுலுக்கு வரும்.

உண்மையில், நாட்டின் மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து வருவதால் ரஷ்யா கலக்கமடைந்துள்ளது.

ஜூன் மாதத்தில், நாட்டில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 1 லட்சத்திற்கும் குறைவாக குறைந்தது. உக்ரைன் போருக்குப் பின்னர் 600,000-க்கும் மேற்பட்ட ரஷ்யர்கள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது ஊனமுற்றுள்ளனர். இது மக்களிடையே இன்னும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அரசின் கவலை அதிகரித்துள்ளது. இதைச் சமாளிக்க ரஷ்ய அரசு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது. குழந்தை பெற்றுக் கொள்ள லட்சக்கணக்கில் ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.

குழந்தை பெற்றுக்கொள்ளக் கூடாது என்ற கருத்தை மேற்கத்திய நாடுகளின் தாராளவாத பிரச்சாரம் என்று ரஷ்ய அரசு வர்ணித்துள்ளது. புதிய சட்டம் இந்த பிரச்சாரத்தை நிறுத்த உதவும் என்று ரஷ்யா நம்புகிறது.

குழந்தை பெற்றுக்கொள்ளக் கூடாது என்று ஊக்குவிப்பவர் மற்றும் ஒரு அமைப்புக்கு 400,000 rubles வரை (இலங்கை பிணமதிப்பில் சுமார் ரூ. 11,86,000) அபராதம் விதிக்க புதிய சட்டம் வழிவகை செய்கிறது.

குறைந்து வரும் பிறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்த பாலியல் அமைச்சகத்தை உருவாக்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. இது தவிர, அரசாங்கம் விசித்திரமான முன்மொழிவுகளையும் மக்கள் முன் வைக்கிறது. அலுவலகத்தில் மதிய உணவு நேரத்தில் உடலுறவு கொள்ளுமாறு அரசாங்கம் மக்களுக்கு முன்மொழிந்துள்ளது.

மாஸ்கோவில் அலுவலக வேலைகளில் பணிபுரியும் பெண்களுக்கு சில கேள்விகளின் பட்டியல் வழங்கப்படுகிறது. இது அவரது மாதவிடாய் சுழற்சி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய தகவல்களைத் தேடுகிறது. இந்த முயற்சியின் கீழ், மாஸ்கோவில் 20 ஆயிரம் பெண்களுக்கு இலவச கருவுறுதல் சோதனைகளும் நடத்தப்பட்டுள்ளன.

ரஷ்யாவின் கபரோவ்ஸ்க் மாகாணத்தில் 18 முதல் 23 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு குழந்தை பிறந்தால் 1 லட்சம் ரூபிள் வழங்கப்படும். செல்யாபின்ஸ்கில், பெண்களுக்கு முதல் குழந்தை பிறப்பதற்காக 9 லட்சம் ரூபிள் வழங்கப்படுகிறது.

 

Share
தொடர்புடையது
14 11 2025 819486 850x460
ஏனையவை

சந்தேகங்களை விடுத்து தேசத்தைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுங்கள் – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைப்பு!

ஒருவரையொருவர் சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனும் பார்ப்பதை விடுத்து, நாட்டின் எதிர்காலத்திற்காக அனைவரும் தத்தமது பொறுப்புகளை முறையாக நிறைவேற்ற...

MediaFile 7 1
ஏனையவை

மன்னார் கடற்றொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்: கூட்டுறவுச் சங்கம் கோரிக்கை!

நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களும் பாரிய பாதிப்புக்களைச் சந்தித்துள்ள...

images 8 2
ஏனையவை

கொழும்பு பெரஹர மாவத்த காணி 99 வருட குத்தகைக்கு விடுவிப்பு: முதலீட்டாளர்களைத் தெரிவு செய்ய அமைச்சரவை அனுமதி!

நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் (UDA) சொந்தமான கொழும்பு 03, கொள்ளுப்பிட்டி, பெரஹர மாவத்தையில் அமைந்துள்ள காணியைக்...

articles2FyEG6lrLYMw8L60exw5pH
ஏனையவை

காணி உரிமை வழங்கினால் மலையக வீட்டுப் பிரச்சினை தீரும் – ஜனாதிபதியிடம் ஜீவன் தொண்டமான் கோரிக்கை!

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நுவரெலியா மாவட்டச் செயலகத்தில்...