11 12
ஏனையவை

மக்கள்தொகையை அதிகரிக்க புதிய சட்டம் இயற்றும் ரஷ்யா., மீறினால் லட்சங்களில் அபராதம்

Share

மக்கள்தொகையை அதிகரிக்க புதிய சட்டம் இயற்றும் ரஷ்யா., மீறினால் லட்சங்களில் அபராதம்

ரஷ்ய அரசு புதிய சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த சட்டத்தின் கீழ், நாட்டில் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று ஊக்குவிப்பவர்களுக்கு தடை விதிக்கப்படும்.

மக்கள் குழந்தைகளைப் பெறுவதைத் தடுக்கும் எந்த உள்ளடக்கத்தையும் எந்த சமூக ஊடக தளத்திலும் வெளியிட முடியாது.

ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான ஸ்டேட் டூமாவும் இது தொடர்பான முன்மொழிவை நவம்பர் 12 அன்று நிறைவேற்றியுள்ளது.

இந்த மசோதா இப்போது நவம்பர் 20-ஆம் திகதி மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும். அதனைக் கடந்து சென்ற பிறகு, அது விளாடிமிர் புடினின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். புதினின் ஒப்புதலுக்குப் பிறகு இந்த சட்டம் அமுலுக்கு வரும்.

உண்மையில், நாட்டின் மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து வருவதால் ரஷ்யா கலக்கமடைந்துள்ளது.

ஜூன் மாதத்தில், நாட்டில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 1 லட்சத்திற்கும் குறைவாக குறைந்தது. உக்ரைன் போருக்குப் பின்னர் 600,000-க்கும் மேற்பட்ட ரஷ்யர்கள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது ஊனமுற்றுள்ளனர். இது மக்களிடையே இன்னும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அரசின் கவலை அதிகரித்துள்ளது. இதைச் சமாளிக்க ரஷ்ய அரசு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது. குழந்தை பெற்றுக் கொள்ள லட்சக்கணக்கில் ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.

குழந்தை பெற்றுக்கொள்ளக் கூடாது என்ற கருத்தை மேற்கத்திய நாடுகளின் தாராளவாத பிரச்சாரம் என்று ரஷ்ய அரசு வர்ணித்துள்ளது. புதிய சட்டம் இந்த பிரச்சாரத்தை நிறுத்த உதவும் என்று ரஷ்யா நம்புகிறது.

குழந்தை பெற்றுக்கொள்ளக் கூடாது என்று ஊக்குவிப்பவர் மற்றும் ஒரு அமைப்புக்கு 400,000 rubles வரை (இலங்கை பிணமதிப்பில் சுமார் ரூ. 11,86,000) அபராதம் விதிக்க புதிய சட்டம் வழிவகை செய்கிறது.

குறைந்து வரும் பிறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்த பாலியல் அமைச்சகத்தை உருவாக்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. இது தவிர, அரசாங்கம் விசித்திரமான முன்மொழிவுகளையும் மக்கள் முன் வைக்கிறது. அலுவலகத்தில் மதிய உணவு நேரத்தில் உடலுறவு கொள்ளுமாறு அரசாங்கம் மக்களுக்கு முன்மொழிந்துள்ளது.

மாஸ்கோவில் அலுவலக வேலைகளில் பணிபுரியும் பெண்களுக்கு சில கேள்விகளின் பட்டியல் வழங்கப்படுகிறது. இது அவரது மாதவிடாய் சுழற்சி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய தகவல்களைத் தேடுகிறது. இந்த முயற்சியின் கீழ், மாஸ்கோவில் 20 ஆயிரம் பெண்களுக்கு இலவச கருவுறுதல் சோதனைகளும் நடத்தப்பட்டுள்ளன.

ரஷ்யாவின் கபரோவ்ஸ்க் மாகாணத்தில் 18 முதல் 23 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு குழந்தை பிறந்தால் 1 லட்சம் ரூபிள் வழங்கப்படும். செல்யாபின்ஸ்கில், பெண்களுக்கு முதல் குழந்தை பிறப்பதற்காக 9 லட்சம் ரூபிள் வழங்கப்படுகிறது.

 

Share
தொடர்புடையது
25 69035b0d8bf92
இலங்கைஏனையவைசெய்திகள்

அவுஸ்திரேலியாவில் இலங்கை பௌத்த பிக்குக்கு சிறைத்தண்டனை விதிப்பு

அவுஸ்திரேயாவில் இலங்கையை சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக...

Weligama Chairman shooting
ஏனையவை

லசா கொலையில் புதுத் திருப்பம்: உடந்தையாக இருந்தது நெருங்கிய நண்பரே என அதிர்ச்சி தகவல்.

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர கொலையில் துப்பாக்கிதாரிக்கு உதவிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்,...

25 69020810f343e
ஏனையவை

கல்கிசை நீதிமன்று: அதிகாரிகளுக்கு அதிர்ச்சி அளித்த சிறைக்கைதியின் செயல்.

நீதிமன்றத்தின் வேண்டுகோளின் பேரில் இன்று (29) கல்கிசை நீதவான் நீதிமன்றத்தின் களஞ்சிய அறையை சுத்தம் செய்ய...

25 6852cf07dcfea
ஏனையவை

தேங்காய் விலை தொடர்ந்து மூன்றாவது வாரமாகச் சரிவு: இடைத்தரகர்களால் சந்தை விலை உயர்வு என குற்றச்சாட்டு

நாட்டில் வாராந்திர ஏலத்தில் தேங்காயின் சராசரி விலைகள் தொடர்ந்து மூன்றாவது வாரமாகச் 5 சதவீதம் சரிந்துள்ளதாக...