tamilnih 66 scaled
ஏனையவை

ரஷ்யா மூன்றாம் உலகப்போரைத் துவக்கலாம்: கசிந்த ஆவணங்கள்

Share

ரஷ்யா மூன்றாம் உலகப்போரைத் துவக்கக்கூடும் என்ற அச்சத்தில், அதை எதிர்கொள்ள ஜேர்மனி தயாராகிவருவதாக ஜேர்மன் பாதுகாப்புத்துறையிலிருந்து கசிந்த ஆவணங்கள் சில தெரிவிப்பதாக ஜேர்மன் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ரஷ்ய – உக்ரைன் போர் துவங்கி இரண்டு ஆண்டுகள் முடிவடைய உள்ள நிலையில், ரஷ்யா அடுத்த ஆண்டு நேட்டோ கூட்டணி நாடுகள் மீது தாக்குதலை விரிவாக்கலாம் என்றும், அதனால், மூன்றாம் உலகப்போர் துவங்கும் அபாயம் ஏற்படலாம் என்றும் ஜேர்மனி கருதுவதாக ஜேர்மன் பாதுகாப்புத்துறையிலிருந்து கசிந்த ஆவணங்கள் சில தெரிவிப்பதாக ஜேர்மன் செய்தித்தாளான Bild செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன், ஐரோப்பிய நாடுகளின் ராணுவங்கள் நேட்டோ மீதான ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ளத் தயாராகிவருவதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.

இந்நிலையில், பிரச்சினை விரைவில் பெரிதாகலாம் என்றும், ஆகவே, பல்லாயிரக்கணக்கான ஜேர்மன் வீரர்கள் போர்க்களத்துக்கு அனுப்பப்பட இருக்கிறார்கள் என்றும் பாதுகாப்பு அமைச்சக வட்டாரத்தை மேற்கோள் காட்டி அந்த செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில், ஏற்கனவே 31 நாட்டு வீரர்கள் பங்கேற்கும் நேட்டோ போர்ப்பயிற்சி ஒன்றிற்காக பிரித்தானியாவும் ஆயிரக்கணக்கான வீரர்களை தயாராக்கிவருவதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
14 11 2025 819486 850x460
ஏனையவை

சந்தேகங்களை விடுத்து தேசத்தைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுங்கள் – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைப்பு!

ஒருவரையொருவர் சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனும் பார்ப்பதை விடுத்து, நாட்டின் எதிர்காலத்திற்காக அனைவரும் தத்தமது பொறுப்புகளை முறையாக நிறைவேற்ற...

MediaFile 7 1
ஏனையவை

மன்னார் கடற்றொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்: கூட்டுறவுச் சங்கம் கோரிக்கை!

நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களும் பாரிய பாதிப்புக்களைச் சந்தித்துள்ள...

images 8 2
ஏனையவை

கொழும்பு பெரஹர மாவத்த காணி 99 வருட குத்தகைக்கு விடுவிப்பு: முதலீட்டாளர்களைத் தெரிவு செய்ய அமைச்சரவை அனுமதி!

நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் (UDA) சொந்தமான கொழும்பு 03, கொள்ளுப்பிட்டி, பெரஹர மாவத்தையில் அமைந்துள்ள காணியைக்...

articles2FyEG6lrLYMw8L60exw5pH
ஏனையவை

காணி உரிமை வழங்கினால் மலையக வீட்டுப் பிரச்சினை தீரும் – ஜனாதிபதியிடம் ஜீவன் தொண்டமான் கோரிக்கை!

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நுவரெலியா மாவட்டச் செயலகத்தில்...