13 13
ஏனையவை

தேர்தலில் தோல்வி : அரசியலுக்கு விடைகொடுக்கும் மற்றுமொருவர்

Share

தேர்தலில் தோல்வி : அரசியலுக்கு விடைகொடுக்கும் மற்றுமொருவர்

தீவிர அரசியலில் இருந்தும் ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தறை வெலிகம அமைப்பாளர் பதவியிலிருந்தும் விலகவுள்ளதாக ரெஹான் ஜயவிக்ரம(Rehan Jayawickrama) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தனது பதவி விலகல் கடிதத்தை கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு (sajith premadasa)அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அரசியலில் மிகவும் கடினமான பயணத்தை கடந்து வந்தாலும், தொடர்ச்சியான தேர்தல் தோல்விகளால் குடும்பம் மற்றும் அவர்களுக்காக உழைக்க வேண்டிய தருணம் வந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த முடிவு மிக எளிதாக எடுக்கப்பட்டதல்ல, ஆனால் அது சரியான முடிவு என இப்போது உணரமுடிகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக வெலிகம மாநகர சபையின் மேயராக பணியாற்றிய இவர், இம்முறை மாத்தறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

முன்னதாக பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

Share
தொடர்புடையது
image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...