12 17
ஏனையவை

E8 விசா சர்ச்சையின் பின்னணியில் இருந்த நபர்: உண்மையை போட்டுடைத்த அநுர தரப்பு

Share

கொரிய வேலைவாய்ப்புகளுக்கான E8 விசா வகைக்காக முன்னாள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார (Manusha Nanayakkara) கையெழுத்திட்ட ஒப்பந்தம் ஒரு சட்டவிரோத ஒப்பந்தம் என வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை நேற்றைய (9.1.2025) நாடாளுமன்ற அமர்வின் போது அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, கொரியாவின் வாண்டோ கவுண்டியின் மேயருடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போது, அதனை வாசித்து கூட பார்க்கவில்லை என்றும் அமைச்சர் விஜித கூறியுள்ளார்.

இவ்வாறனதொரு பின்னணியில், சட்டவிரோதமாக கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் கீழ், இலங்கை இளைஞர்களை கொரியாவிற்கு அனுப்புவதற்கான இனி எந்த வாய்ப்பும் இல்லை என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

அத்தோடு, சம்பந்தப்பட்ட ஒப்பந்தம் பாகிஸ்தானுக்காக தயாரிக்கப்பட்ட ஒப்பந்தம் என்றும், ஒரு தொழிலாளி ஏதேனும் துன்பத்தை சந்தித்தால், பணம் செலுத்தும் இடம் பாகிஸ்தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, பாகிஸ்தானுக்காக தயாரிக்கப்பட்ட ஒப்பந்தம் இலங்கைக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், சட்டவிரோத E8 விசா முறையின் கீழ் இலங்கை தொழிலாளர்கள் இனி கொரியாவிற்கு அனுப்பப்பட மாட்டார்கள் என்றும், இதன் கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் திட்டத்தை வகுக்க அமைச்சகம் எதிர்பார்க்கிறது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 7
ஏனையவை

கொழும்பில் பிரபல சுப்பர் மார்க்கெட்டுகளின் மோசமான செயல் – அபராதம் விதிப்பு

கொழும்பில் காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனை செய்த சுப்பர் மார்க்கெட்டுகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தெமட்டகொட மற்றும் மட்டக்குளிய...

25 6848f21beec56
ஏனையவை

புதிய அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் பல கைதிகள் முறைகேடான வழியில் விடுவிப்பு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரான காலப்பகுதியில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான கைதிகள்...

25 683cefcc4dfbd
ஏனையவை

அச்சுவேலியில் பெண் தலைமைத்துவ குடும்பத்தின் கோழிகளுக்கு விஷம் வைத்த விசமிகள்!

யாழ். அச்சுவேலி பகுதியில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்று வாழ்வாதாரத்துக்காக வளர்த்து வந்த கோழிகளுக்கு விஷம்...

images 1 2
ஏனையவை

சரிகமப 5வது சீசனில் கலக்கிய முன்னணி நடிகையின் மகள்..! ஆடிஷனில் செம பாராட்டு..

ரியாலிட்டி ஷோக்களுக்கு இன்று மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக சரிகமப, சூப்பர்...