12 17
ஏனையவை

E8 விசா சர்ச்சையின் பின்னணியில் இருந்த நபர்: உண்மையை போட்டுடைத்த அநுர தரப்பு

Share

கொரிய வேலைவாய்ப்புகளுக்கான E8 விசா வகைக்காக முன்னாள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார (Manusha Nanayakkara) கையெழுத்திட்ட ஒப்பந்தம் ஒரு சட்டவிரோத ஒப்பந்தம் என வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை நேற்றைய (9.1.2025) நாடாளுமன்ற அமர்வின் போது அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, கொரியாவின் வாண்டோ கவுண்டியின் மேயருடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போது, அதனை வாசித்து கூட பார்க்கவில்லை என்றும் அமைச்சர் விஜித கூறியுள்ளார்.

இவ்வாறனதொரு பின்னணியில், சட்டவிரோதமாக கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் கீழ், இலங்கை இளைஞர்களை கொரியாவிற்கு அனுப்புவதற்கான இனி எந்த வாய்ப்பும் இல்லை என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

அத்தோடு, சம்பந்தப்பட்ட ஒப்பந்தம் பாகிஸ்தானுக்காக தயாரிக்கப்பட்ட ஒப்பந்தம் என்றும், ஒரு தொழிலாளி ஏதேனும் துன்பத்தை சந்தித்தால், பணம் செலுத்தும் இடம் பாகிஸ்தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, பாகிஸ்தானுக்காக தயாரிக்கப்பட்ட ஒப்பந்தம் இலங்கைக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், சட்டவிரோத E8 விசா முறையின் கீழ் இலங்கை தொழிலாளர்கள் இனி கொரியாவிற்கு அனுப்பப்பட மாட்டார்கள் என்றும், இதன் கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் திட்டத்தை வகுக்க அமைச்சகம் எதிர்பார்க்கிறது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...