6 37
ஏனையவை

மீண்டும் நாடாளுமன்றம் செல்ல தயாராகும் ரணில்

Share

மீண்டும் நாடாளுமன்றம் செல்ல தயாராகும் ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) மீண்டும் நாடாளுமன்றம் செல்ல தயாராகி வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்ற தேசியப்பட்டியல் ஆசனத்தின் ஊடாக அவர் நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்கவுள்ளார்.

இதன்படி, கட்சியின் இரண்டு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட இருவரில் ஒருவர் பதவி விலகல் செய்ய உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

பின்னர் அந்த வெற்றிடத்திற்கு வேறு ஒருவரை நியமிப்பதற்கு சட்டத்தில் தடை இல்லை. இதனால் அந்த இடத்திற்கு ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட உள்ளார்.

இதேவேளை, எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட புதிய ஜனநாயக முன்னணியில் ரவி கருணாநாயக்கவை (Ravi Karunanayake) தேசிய பட்டியல் உறுப்பினராக நியமித்துள்ளதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார்.

2024 பொதுத் தேர்தல் பெறுபேறுகளின் படி புதிய ஜனநாயக முன்னணி இரண்டு தேசிய பட்டியல் உறுப்பினர்களைப் பெற்றுக்கொண்ட நிலையில், அவர்களில் ஒருவராக இவரது பெயர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...