5 46
ஏனையவை

தப்பிக்க முடியாத நிலையில் ராஜபக்சர்கள்! அநுர அரசாங்கம் வெளியிட்டுள்ள நம்பிக்கை

Share

தப்பிக்க முடியாத நிலையில் ராஜபக்சர்கள்! அநுர அரசாங்கம் வெளியிட்டுள்ள நம்பிக்கை

ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட ராஜபக்சர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பவே முடியாது என்று இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே(Sunil Kumara Gamage) தெரிவித்துள்ளார்.

ராஜபக்சக்களின் ஊழல் மோசடி ஆட்சியே அவர்களின் படுதோல்விக்குப் பிரதான காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த தேர்தல்களில் ராஜபக்சர்கள் வரலாறு காணாத வகையில் படுதோல்வியடைந்துள்ளனர். அவர்களை மக்கள் அடியோடு நிராகரித்து விட்டார்கள்.

ராஜபக்சக்களின் ஊழல், மோசடி ஆட்சியே அவர்களின் படுதோல்விக்குப் பிரதான காரணம். ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட ராஜபக்சர்கள் தேர்தல்களில் படுதோல்வியடைந்தாலும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பவே முடியாது.

அவர்கள் இழைத்த குற்றங்களுக்கு அவர்கள் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் ஊழல் மோசடிகளுக்கு இடமேயில்லை. ஊழல் மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதே எமது அரசின் பிரதான நோக்கம் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...