ஏனையவை

கையெழுத்திடாத காசோலையை ஏற்க மறுத்த ராகுல் ராவிட்டின் பெருந்தன்மை

Share
22 8
Share

கையெழுத்திடாத காசோலையை ஏற்க மறுத்த ராகுல் ராவிட்டின் பெருந்தன்மை

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ராகுல் ராவிட், ஐபிஎல் அணியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைமைப்பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐ.பி.எல். அணிகள் ராகுல் ராவிட்டை தலைமை பயிற்சியாளராக நியமிக்க முயற்சி செய்தன. அவர் ஏற்கனவே விளையாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி, ராகுல் ராவிட் எங்கள் அணியின் தலைமை பயிற்சியாளர் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதற்கிடையே ராகுல் ராவிட்டை தலைமை பயிற்சியாளர் பதவிக்கு அணுகியபோது, கையெழுத்திடாத காசோலையை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி ராகுல் ராவிட்டுக்கு கொடுக்க முன்வந்துள்ள நிலையில், அதை ராகுல் ராவிட் புறக்கணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர் அணிக்கு மீண்டும் திரும்புவதை விரும்பியதாலும், இதை ஒரு உணர்ச்சிகரமானதாக எடுத்துக் கொண்டதாலும் அந்த நன்கொடையை நிராகரித்துள்ளார்.

ராகுல் ராவிட் 2011 முதல் 2013 வரை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தான் அணியில் இருந்து ஓய்வு பெற்றபின், இரண்டு சீசனில் அந்த அணியின் ஆலோசகராகவும் இருந்துள்ளார்

Share
Related Articles
2 17
ஏனையவை

முல்லைத்தீவில் அனைத்து பிரதேச சபைகளையும் தன்வசமாக்கிய தமிழரசுக் கட்சி!

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய மாந்தை கிழக்கு...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

30
இலங்கைஏனையவைசெய்திகள்

தேர்தல் கடமைகளுக்கு 65 ஆயிரம் பொலிஸார் நியமனம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கடமைகளுக்காக சுமார் 65,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக...

4 2
இலங்கைஏனையவைசெய்திகள்

தமிழ் அரசுக் கட்சியுடன் கைகோர்க்க தயார்! நிபந்தனைகளை வெளியிட்ட கஜேந்திரகுமார்

தமிழ் அரசுக் கட்சி சில தாம் எதிர்பார்க்கும் சில கொள்கைகளை தற்போது கொண்டிருக்குமாயின் அவர்களோடு இணைந்து...