24 673c7231255dc
ஏனையவை

சிறுவர்கள் தொடர்பில் பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Share

சிறுவர்கள் தொடர்பில் பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இலங்கையில்(sri lanka) சிறுவர்களிடையே காய்ச்சல், வைரஸ் காய்ச்சல், டெங்கு போன்றவற்றின் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக குழந்தை நல மருத்துவ நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா(Dr. Deepal Perera) தெரிவித்தார்.

இருமல், சளி, உடல்வலி மற்றும் அவ்வப்போது வாந்தி போன்ற வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகள் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார். குறிப்பாக காய்ச்சல் மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் அறிகுறிகளை உன்னிப்பாகக் கண்காணித்து மருத்துவ உதவியை நாடுமாறு அவர் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.

தற்போது பாடசாலை மாணவர்களிடையே கை, கால் மற்றும் வாய் நோய் (HFMD) பரவி வருவதாகவும் வைத்தியர் தீபால் பெரேரா சுட்டிக்காட்டினார்.

குழந்தைகளின் உள்ளங்கைகள் மற்றும் உள்ளங்கால்களில் சிறிய வட்ட வெள்ளை கொப்புளங்கள், வாயைச் சுற்றி அல்லது மேல் பிட்டங்களில், அதே போல் வாயில் பழுப்பு அல்லது சிவப்பு தோல் மற்றும் அரிப்பு போன்ற அறிகுறிகளைக் கவனிக்குமாறு பெற்றோர்களை சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொள்கிறார்கள்.

இந்த அறிகுறிகளில் சில வைரஸ் தொற்றின் அறிகுறிகளைப் போலவே இருப்பதாக பெற்றோருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது, எனவே காய்ச்சல் தொடர்ந்தால் மருத்துவ ஆலோசனையைப் பெறுவது அவசியம்.

அத்துடன் டெங்குவைக் கண்டறிய இரத்தப் பரிசோதனைகளையும் வைத்தியர் தீபால் பெரேரா பரிந்துரைத்தார், இது தற்போது அதிகரித்துவரும் நோயாகும்.

டெங்கு 0.1% இறப்பு விகிதத்துடன் கூடிய அபாயகரமான சாத்தியக்கூறுகள் இருப்பதால், அதற்கு சிறப்பு எச்சரிக்கை தேவை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

பெற்றோர்கள் விழிப்புடன் இருக்கவும், தங்கள் குழந்தைக்கு நோய் அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை பெறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...

26 6960cb1db7fc8
ஏனையவை

கிரீன்லாந்து விவகாரம்: நேட்டோவின் இருப்பையே கேள்விக்குறியாக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் நகர்வு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தை இணைப்பதில் காட்டி வரும் தீவிரம், இரண்டாம் உலகப் போருக்குப்...