image 339b4818b7
ஏனையவை

மின்சாரக் கட்டணத்தை 11% அதிகரிக்கத் திட்டம்: மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதி – ஜனக ரத்நாயக்க கடும் சாடல்!

Share

‘டித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட இழப்புகளைக் காரணம் காட்டி, மின்சாரக் கட்டணத்தை 11% அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை எடுத்துள்ள தீர்மானம் பொதுமக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய துரோகம் எனப் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (02) இடம்பெற்ற ஊடக சந்திப்பில், டித்வா சூறாவளியால் மின்சார சபைக்கு 20 பில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஊழியர் இழப்பீடுகள் உட்பட 07 பில்லியன் ரூபாயை ஈடுசெய்ய நுகர்வோர் மீது சுமையை ஏற்ற முற்படுகின்றனர்.

கடந்த ஆண்டில் மட்டும் மின்சார சபை 147 பில்லியனுக்கும் அதிகமான வருமானத்தைப் பெற்றுள்ளது. அத்தகைய நிலையில், ஒரு இயற்கை அனர்த்தத்தால் ஏற்பட்ட இழப்பை ஏழை மக்களிடம் வசூலிப்பது “மரத்திலிருந்து விழுந்தவனை மாடு முட்டியது போன்ற” செயலாகும்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே இந்த அதிகரிப்பு முன்மொழியப்பட்டுள்ளது. ஐ.எம்.எஃப் ஒரு நிவாரண நிறுவனம் அல்ல, அது 6.5% வட்டி வசூலிக்கும் ஒரு வணிக நிறுவனம் என அவர் விமர்சித்தார்.

நாட்டில் இன்னும் 30,000-க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து, உணவின்றித் தவிக்கும் நிலையில் இந்தக் கட்டண உயர்வு நியாயமற்றது என அவர் குறிப்பிட்டார்.

“பொதுமக்கள் இந்தத் திட்டத்திற்கு எதிராகக் குரல் எழுப்பத் தவறினால், அரசாங்கம் நிச்சயமாகக் கட்டணத்தை அதிகரிக்கும். மின்சாரப் பிரச்சினையை அரசியலாக்காமல் மக்கள் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும்.” – ஜனக ரத்நாயக்க.

கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்தால், ஏற்கனவே பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர மற்றும் வறிய குடும்பங்கள் பாரிய நெருக்கடிக்கு உள்ளாவார்கள் எனவும், பல பகுதிகளில் மின்சார விநியோகத் துண்டிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் மேலும் எச்சரித்தார்.

 

 

Share
தொடர்புடையது
Untitled 30
ஏனையவை

மின்சாரக் கட்டண உயர்வு: ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் நடைமுறை!

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக்...

image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...