24 66c983c68c5c0
ஏனையவை

பதின்ம வயது மாணவிகள் வன்புணர்வு : பாடசாலை அதிபர் கைது

Share

பதின்ம வயது மாணவிகள் வன்புணர்வு : பாடசாலை அதிபர் கைது

பாடசாலை மாணவிகள் இருவரை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய அதிபர் ஒருவர் தொடர்பில் கதிர்காமம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் (22) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கதிர்காமம் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இப்பாடசாலையில் 8 மற்றும் 9 ஆம் ஆண்டுகளில் கல்வி கற்கும் இந்த மாணவர்கள் விளையாட்டு நடவடிக்கைகளுக்காக பாடசாலைக்கு வந்த போது உணவு உண்பதற்காக ஒதுக்கப்பட்ட அறையில் வைத்து பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த அதிபர் 2021ஆம் ஆண்டு முதல் மாணவியையும், 2023ஆம் ஆண்டு மற்றுமொரு மாணவியையும் வன்புணர்விற்கு உட்படுத்தியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் கதிர்காமம் காவல்துறையினர் அதிபரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அதிபர் 49 வயதுடைய திருமணமானவர் எனவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கதிர்காமம் காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் கதிர்காமம் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Share
தொடர்புடையது
Untitled 30
ஏனையவை

மின்சாரக் கட்டண உயர்வு: ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் நடைமுறை!

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக்...

image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...