24 66c983c68c5c0
ஏனையவை

பதின்ம வயது மாணவிகள் வன்புணர்வு : பாடசாலை அதிபர் கைது

Share

பதின்ம வயது மாணவிகள் வன்புணர்வு : பாடசாலை அதிபர் கைது

பாடசாலை மாணவிகள் இருவரை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய அதிபர் ஒருவர் தொடர்பில் கதிர்காமம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் (22) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கதிர்காமம் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இப்பாடசாலையில் 8 மற்றும் 9 ஆம் ஆண்டுகளில் கல்வி கற்கும் இந்த மாணவர்கள் விளையாட்டு நடவடிக்கைகளுக்காக பாடசாலைக்கு வந்த போது உணவு உண்பதற்காக ஒதுக்கப்பட்ட அறையில் வைத்து பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த அதிபர் 2021ஆம் ஆண்டு முதல் மாணவியையும், 2023ஆம் ஆண்டு மற்றுமொரு மாணவியையும் வன்புணர்விற்கு உட்படுத்தியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் கதிர்காமம் காவல்துறையினர் அதிபரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அதிபர் 49 வயதுடைய திருமணமானவர் எனவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கதிர்காமம் காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் கதிர்காமம் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Share
தொடர்புடையது
UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...

26 6960cb1db7fc8
ஏனையவை

கிரீன்லாந்து விவகாரம்: நேட்டோவின் இருப்பையே கேள்விக்குறியாக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் நகர்வு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தை இணைப்பதில் காட்டி வரும் தீவிரம், இரண்டாம் உலகப் போருக்குப்...