1 43
ஏனையவை

நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள ஜனாதிபதி அநுர

Share

நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள ஜனாதிபதி அநுர

பொதுத் தேர்தலில் மகத்தான தேர்தல் வெற்றிக்காக வாக்களித்த நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நன்றி தெரிவித்துள்ளார்.

“மறுமலர்ச்சி சகாப்தத்தை ஆரம்பிப்பதற்கான பொறுப்பை சுமந்த அனைவருக்கும் நன்றி!” என ஜனாதிபதி தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நடைபெற்ற தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையை பெற்றுள்ள தேசிய மக்கள் சக்தி புதிய நாடாளுமன்றத்தை அமைக்கவுள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி நாடாளுமன்றம் கூடவுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 141 ஆசனங்களை பெற்றுள்ள நிலையில், தேசிய பட்டியல் ஊடாக 18 ஆசனங்களை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றத்தை சுத்தம் செய்து புதியவர்களை நாடாளுமன்றம் கொண்டு செல்வது தேசிய மக்கள் சக்தியின் கடமை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...